ஆப்நகரம்

என் பேச்சை கேட்கலை.. கடைசில இப்படி ஆகிருச்சு: பகீர் கிளப்பும் விஜே சித்ராவின் தோழி..!

தற்கொலை செய்து கொண்ட விஜே சித்ராவின் தோழி ரேகா நாயர் சமீபத்தில் அளித்துள்ள பேட்டி பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

Samayam Tamil 17 May 2022, 7:26 pm
பிரபல விஜேவாக இருந்து சின்னத்திரை நடிகையாக புகழ் பெற்றவர் சித்ரா. விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் மூலம் ஏராளமான ரசிகர்களை தன்வசம் ஈர்த்தார் சித்ரா. சின்னத்திரையில் சீரியல்களில் நடித்து வந்த இவர் வெள்ளித்திரை படங்களிலும் நடிக்க ஒப்பந்தமானார்.
Samayam Tamil VJ Chitra
VJ Chitra


இந்நிலையில் கடந்த 2020ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் சென்னை நசரத்பேட்டையில் உள்ள ஹோட்டலில் தனது காதல் கணவருடன் தங்கியிருந்த சித்ரா தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை கிளப்பியது. இதுதொடர்பாக அவரது கணவர் ஹேமந்த் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் சமீபகாலமாக விஜே சித்ரா தற்கொலை குறித்து வெளியாகும் செய்திகள் கடும் பரபரப்பை கிளப்பியுள்ளன. சித்ரா உயிரிழந்த விவகாரத்தில் அரசியல் பிரமுகர் ஒருவருக்கு தொடர்பு இருப்பதாகவும், தன்னுடைய உயிருக்கு ஆபத்து இருப்பதாகவும் ஹேம்நாத் சமூக ஊடகங்களில் கருத்து தெரிவித்து வந்தார்.

இந்நிலையில் விஜே சித்ராவின் தற்கொலை தொடர்பாக அவரது தோழி ரேகா நாயர் பல அதிர்ச்சிகரமான தகவலை கூறியுள்ளார். பல பெண்களிடம் தொடர்பு வைத்துக் கொண்டு அவர்களை கழட்டி விடுவது தான் ஹேமந்தின் வேலை. அவனை யூஸ் பண்ணிக்கிட்டு கழட்டி விட்டுடுன்னு சொன்னேன். ஆனால், அவள் கேட்கலை. அவசர அவசரமா ரெஜிஸ்டர் மேரேஜ்லாம் பண்ணிட்டு கடைசில இப்படி ஆகிருச்சு என்று தெரிவித்துள்ளார்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் முல்லையாக ஆல்யா..?: வெளியான லேட்டஸ்ட் தகவல்.!

விஜே சித்ரா தற்கொலை செய்து கொள்ளவில்லை என்றும் அவரது மரணம் கொலை தான் என அதிர்ச்சிகரமான தகவல்களை கூறியுள்ளார் ரேகா நாயர். ஆனால், விஜே சித்ராவை ஹேமந்த் கொலை செய்யவில்லை என்றும் சித்ராவை யார் கொலை செய்தது என்பது ஹேமந்துக்கு நல்லாவே தெரியும் என்றும் மாஜி அமைச்சருக்கு இதில் தொடர்பில்லை என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். ஹேமந்த் விஜே சித்ராவை பல வகையில் யூஸ் செய்து விட்டு இப்படியொரு நிலைக்கு தள்ளி விட்டான் என பரபரப்பான தகவல்களை வெளியிட்டுள்ளார் ரேகா நாயர். அவரின் இந்த பேட்டி தற்போது பரபரப்பை கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி