ஆப்நகரம்

ரோஜா சீரியல் நாயகி பிரியங்காவின் ரோல் மாடல் யார் தெரியுமா?

ஒவ்வொருவருக்கும் ரோல் மாடலாக ஒருவர் இருப்பார்கள். நடிகை பிரியங்கா நல்கரிக்கும் ரோல்மாடலாக ஒருவர் இருக்கிறார் அவரைப்பற்றிதான் ரீல்ஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

Samayam Tamil 19 Jan 2022, 6:56 pm
ரோஜா சீரியல் நடிகை பிரியங்கா நல்கரி தனது ரோல்மாடலாக ஒருவரை குறிப்பிட்டுள்ளார். அவர் ஆடி நடித்த பாடலைத்தான் ரீல்ஸ் வீடியோவாக இன்ஸ்டா பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார்.
Samayam Tamil Priyanka Nalkari
Priyanka Nalkari


ரோஜா சீரியலில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் பிரியங்கா நல்கரி பொங்கல் விடுமுறையை கொண்டாட தனது குடும்பத்தோடு காஷ்மீருக்கு போயிருந்தார். பனிப்பிரதேசத்தில் நனைந்த ரோஜா, அங்கிருந்து தினம் தினம் போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தினார்.

தால் ஏரியில் குடும்பத்தினரோடு துள்ளி விளையாடும் வீடியோவை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார் ரோஜா. முயல்குட்டி போல உற்சாகமாக தாவி குதிக்கிறார் பிரியங்கா நல்கரி. ஜாலி டூர் முடிந்து மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பி விட்டார் ரோஜா. மீண்டும் சூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி அதை ரீல்ஸ் ஆக பதிவிட்டுள்ளார்.

View this post on Instagram A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

படையப்பா படத்தில் இடம்பெற்றுள்ள "சுத்தி சுத்தி வந்தீக"... பாடலின் தெலுங்கு வெர்சன் பாடலுக்கு ஆடியுள்ள பிரியங்கா, தனது ரோல்மாடல் சவுந்தர்யா என்று தெரிவித்துள்ளார்.

View this post on Instagram A post shared by Priyanka Nalkari Official (@nalkarpriyanka)

இந்த பாடலில் சவுந்தர்யாவின் முக பவானையும் உதட்டுச்சுழிப்பும் பார்ப்பவர்களின் இதயத்தை சுண்டி இழுக்கும். பொன்னுமணி தமிழ் படத்தில் அறிமுகமான சவுந்தர்யா தெலுங்கு படத்திலும் பிசியான நடிகையாக வலம் வந்தவர். தனக்கென்று ரசிகர்களை வைத்திருந்த சௌந்தர்யா, கடந்த 2004ஆம் ஆண்டு பெங்களூரு அருகே நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்து விட்டார்.

இன்றைக்கும் தொலைக்காட்சிகளில் சௌந்தர்யா நடித்த திரைப்படங்கள் ஒளிபரப்பாகும் போது கண்ணீர் மல்க ரசிக்கும் ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர். அழகான நடிப்புத்திறமை கொண்ட சவுந்தர்யாவைத்தான் தனது ரோல் மாடல் என்று தனது ரீல்ஸ் வீடியோவில் பதிவிட்டுள்ளார்.

பலரின் எச்சரிக்கையை மீறி பிக்பாஸ் வீட்டிற்கு சென்ற பிரியங்கா: இதுதான் காரணம்!

ரோஜா சீரியலில் அழகான அமைதியான மருமகளாக நடித்து இல்லத்தரசிகளின் உள்ளங்களில் இடம்பிடித்துள்ளார் பிரியங்கா. விரைவில் சின்னத்திரை சவுந்தர்யாவாக ரசிகர்களின் மனதில் இடம் பிடித்து விடுவார் என்று எதிர்பார்க்கலாம்.

அடுத்த செய்தி