ஆப்நகரம்

நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி

காதல் முறிவு குறித்து முதல் முறையாக ரோஜா சீரியல் பிரியங்கா மனம் திறந்துள்ளார்.

Samayam Tamil 19 Nov 2019, 10:18 am
டோலிவுட்டில் முன்னணி ஹீரோ, ஹீரோயின்களுக்கு தங்கையாக நடித்து வந்தவர் பிரியங்கா. இவர் இது வரை மற்ற மொழிகளில் 15 சீரியல்களுக்கு மேல் நடித்துள்ளார். ஆனால் அப்போது கிடைக்காத புகழ் தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலே கிடைத்துவிட்டது.
Samayam Tamil நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி
நிச்சயதார்த்தம் நடந்தது, ஆனால் திருமணம் இல்லை: ரோஜா சீரியல் நாயகி


ஆம்... சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ரோஜா சீரியலில் ரோஜா என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
பிரியங்கா சமீபத்தில், 'எப்படா வருவ? நான் உனக்காக காத்து கொண்டு இருக்கேன்' என்று ட்வீட் செய்தார். இதை பார்த்த நெட்டிசன்கள், 'பிரியங்கா காதலிக்கிறார்... அவருடன் லிவ்- இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறார். இல்லை இல்லை... காதல் முறிந்துவிட்டது' என்று பேச ஆரம்பித்தனர்.

செம்பருத்தி சீரியல் நடிகைக்கு திருமணம்? மாப்பிள்ளை யார் தெரியுமா?

இந்த நிலையில் இது குறித்து பிரியங்கா கூறுகையில், 'ஆமாம்... எனக்கும் என் காதலர் ராகுலுக்கும் கடந்த மே 10ம் தேதி பெற்றோர் சம்மதத்துடன் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. அதற்கு பிறகு எங்கள் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.

அதை எல்லாம் மறந்து பழைய படி சமாதானமாகப் போக நான் பல முறை முயன்றேன். ஆனால் அவர் கண்டு கொள்ளாமல் மலேசியா சென்றுவிட்டர்.

பெல் பாட்டம், கிருதாவுடன் சந்தானத்தை பார்க்க ஆசையா?

நான் அவரை தொடர்பு கொண்டு பேச முயன்றேன், ஆனால் அதுவும் தோல்வியில் தான் முடிந்தது. ஆதலால் இனி இந்த திருமணம் நடைபெற வாய்ப்பு இல்லை' என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி