ரோஜா - சரஸ்வதி நெருக்கம்
ரோஜா மற்றும் சரஸ்வதி இருவரும் அறையில் பேசிக்கொண்டிருப்பதை அனு நின்று ஒட்டுக்கேட்டு கொண்டிருக்கிறார். ரோஜா அவர் தான் தன் அம்மா என கூறுகிறார், அவருக்கு முழு நினைவு வந்ததும் அது உங்களுக்கே தெரியும் என கூறுகிறார்.
சரஸ்வதியும் ரோஜாவிடம் மிக அன்பாக பேசுகிறார். அவரது மடியிலும் படுத்து கொள்கிறார்.
அனுவுக்கு பதிலடி
அதன் பின் அனு சரஸ்வதியை அழைத்து மிரட்டுகிறார். நீ இங்கே நடிக்க தான் வந்திருக்க. சொன்னதை செய்யாமல் இப்படி ரோஜாவுக்கு ஆதரவாக பேசிட்டு இருக்கியே, உன் குடும்பத்தை அழித்துவிடுவேன் என மிரட்டுகிறார்.
நீ இங்கே நடித்து ஏமாற்ற தான் வந்திருக்கிறாய் என மறந்துவிடாதே என அனு சொல்ல, நீயும் இங்கே நடித்து ஏமாற்றிக்கொண்டு தானே இருக்கிறாய் என சொல்லி நோஸ் கட் கொடுக்கிறார்.
அர்ஜுனுக்கு வந்த சந்தேகம்
விபத்தில் பழைய நினைவுகளை மறந்த ஒருவர், 20 வருடங்களாக சொந்தத்தை தேடிக்கொண்டு இருக்கும் போது. எப்படி சரியாக அந்த பூஜை நடந்த இடத்திற்கு வந்தார். ஒரு வேளை அனு அது தெரிந்துதான் பூஜைக்கு ஒப்புகொண்டாளா என அர்ஜுனுக்கு சந்தேகம் வருகிறது.
இதில் இருக்கும் மர்மத்தை செண்பகத்திடமே கேட்டு தெரிந்துகொள்ளலாம் என செல்கிறார் அவர். உண்மையை கண்டுபிடிப்பாரா அர்ஜுன்? பொறுத்திருந்து பார்க்கலாம்.