ஆப்நகரம்

ரத்தம் சொட்ட சொட்ட பரிகார பூஜை செய்யும் ரோஜா! சென்பகத்தால் வரப்போகும் ட்விஸ்ட்?

ரோஜா நேர்மையாக பரிகார பூஜையை செய்யும் நிலையில், அனு மோசடியாக அதை செய்கிறார். சாக்ஷியின் ஆட்கள் சரஸ்வதியை அங்கு அழைத்து வருகின்றனர். அவர் என்ன சொல்ல போகிறார்?

Samayam Tamil 16 Sep 2021, 5:56 am
அர்ஜுனை சாக்ஷியின் ஆட்கள் கடத்தி வைத்திருக்கின்றனர். ரோஜா கத்தியால் உடலில் அடித்துக்கொண்டு ரத்தம் சொட்ட சொட்ட பரிகார பூஜை செய்கிறார்.
Samayam Tamil roja serial september 15 episode will saraswathi save roja
ரத்தம் சொட்ட சொட்ட பரிகார பூஜை செய்யும் ரோஜா! சென்பகத்தால் வரப்போகும் ட்விஸ்ட்?



அர்ஜுனை தேடி செல்லும் ரோஜா

பாட்டி மயக்கம் போட்டது போல நடித்ததால் அர்ஜுன் தண்ணீர் கொண்டு வர வெளியில் செல்கிறார். அந்த நேரத்தில் அவரை சாக்ஷியின் ஆட்கள் அவரை கடத்திவிடுகின்றனர். அவரை ஒரு அறையில் அடைத்து வைக்கின்றனர்.

அர்ஜுன் உன்னை விட்டு ஓடிவிட்டாரு என அனு ரோஜாவை சீண்ட அவர் அர்ஜுனை தேடி கிளம்புகிறார். அவர் எங்கு தேடியும் கிடைக்கவில்லை. பூஜை தொடங்க நேரம் ஆகிவிட்டது என சொல்லி ரோஜாவை கோவிலுக்கு அழைத்து சென்றுவிடுகின்றனர்.

ரத்தம் சொட்ட சொட்ட பரிகாரம் செய்யும் ரோஜா

அதன் பின் எல்லோர் கையிலும் கத்தி வழங்கப்படுகிறது. அதை வைத்து தன்னை அடித்துக்கொண்டு ரோஜா பரிகார பூஜை செய்கிறார். அப்போது அவருக்கு ரத்தம் உடல் முழுவதும் வருகிறது. ஆனாலும் தொடர்ந்து அதை அவர் செய்துகொண்டிருக்கிறார்.

அதை பார்த்து மாமியார் கல்பனா கதறி அழுகிறார். இந்த நேரத்தில் அர்ஜுன் உடன் இல்லாமல் போய்விட்டானே என சொல்லி அவர் உருக்கமாக கடவுளிடம் வேண்டுகிறார்.

வந்திறங்கும் செண்பகம்

அதன் பிறகு செண்பகம் காரில் அங்கு வந்து இறங்குகிறார். அவரிடம் பேசும் சாக்ஷி மிரட்டுகிறார். அவர் சொன்னபடி அனுவை தான் மகள் என சொல்ல வேண்டும். இல்லை என்றால் தன் கஸ்டடியில் இருக்கும் குடும்பத்தினருக்கு ஆபத்து வரும் என கூறுகிறார்.

ரோஜாவுக்கு ஆபத்து வந்திருக்கிறது, அவளை காப்பாற்ற தான் இதற்கே ஒப்புக்கொண்டேன் என மனதிற்குள் நினைத்துக்கொள்கிறார் அவர்.

அடுத்த செய்தி