ஆப்நகரம்

பாட்டி உயிருக்கு ஆபத்து.. ஜோசியரை வைத்து அர்ஜுன் ஆடிய நாடகம்! கொந்தளித்த அனு

தனது அஸ்ஸ்டெண்ட்டை ஜோசியராக வரவைக்கிறார் அர்ஜுன். பாட்டி உயிருக்கு ஆபத்து, அர்ஜுன் - ரோஜாவுக்கு குழந்தை பிறந்தால் தான் உங்கள் உயிர் காப்பாற்றப்படும் என சொல்கிறார் அவர்.

Samayam Tamil 26 Nov 2021, 10:36 am
திருமணம் ஆகி நீண்ட காலம் ஆகியும் அர்ஜுன் ரோஜாவுக்கு எதுவும் நடக்கவில்லை என சொல்லி செண்பகம் முதலிரவுக்கு ஏற்பாடு செய்கிறார், ஆனால் அனு அதை எப்படியாவது தடுக்க வேண்டும் என திட்டம் போடுகிறார்.
Samayam Tamil roja serial today november 11 episode review anu angry as annapoorani arranges for roja arjun first night
பாட்டி உயிருக்கு ஆபத்து.. ஜோசியரை வைத்து அர்ஜுன் ஆடிய நாடகம்! கொந்தளித்த அனு



பாட்டி உயிருக்கு ஆபத்து

அர்ஜுன் அழைத்து வரும் ஜோசியர் ஜாதகத்தை பார்த்துவிட்டு பாட்டி உயிருக்கு ஆபத்து இருப்பதாக சொல்கிறார். அதை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர். பாட்டி எங்க குடும்பத்தின் சொத்து அதற்காக என்ன செய்ய வேண்டும், என் உயிரையும் கொடுக்க தயார் என கூறுகிறார் ரோஜா.

அப்படி என்றால் என் உயிர் தான் முதலில் கொடுப்பேன் என அனு கூறுகிறார். அவர்கள் வாக்குவாதம் செய்துகொண்டிருக்க ஜோசியர் ஒரு பரிகாரம் கூறுகிறார்.

பரிகாரம்

இன்னும் 10 மாதத்திற்குள் பாட்டி அவரது கொள்ளு பேர குழந்தையை பார்க்க வேண்டும், அப்படி செய்தால் அவரது உயிரை காப்பாற்றலாம் என சொல்கிறார். அதனால் அர்ஜுன் - ரோஜாவுக்கு முதலிரவுக்கு ஏற்பாடு செய்துவிடுங்கள் என அர்ஜுன் கூறுகிறார்.

ஆனால் அதை எதிர்க்கும் அனு தனக்கும் அஸ்வினுக்கு திருமணம் செய்துவைத்துவிடுங்கள், நான் உங்களுக்கு பெற்று கொடுக்கிறேன் என கூறுகிறார். அப்படி நடந்தால் நான் செத்துடுவேன், இல்லை உன்னை கொன்றுவிடுவேன் என அஸ்வின் கூறுகிறார்.

ரோஜாவை மறைக்கும் பாட்டி.. கொந்தளிக்கும் அனு

ரோஜா மற்றும் பாட்டி இருவரும் அறையில் பேசி கொண்டிருக்கின்றனர். பாட்டி எடுத்த முடிவால் ரோஜா மகிழ்ச்சியாக இருக்கிறார். அந்த நேரம் பார்த்து அனு, யசோதா ஆகியோர் உள்ளே வர பாட்டி ரோஜாவை ஒளிந்துகொள்ள சொல்கிறார். அவரும் பாத்ரூமில் ஒளிந்து கொள்கிறார்.

அதன் பின் அனு அங்கு வந்து பாட்டியிடம் ரகளை செய்கிறார். நீங்கள் முன்பு போல இல்லை, ரோஜாவுக்கு ஆதரவாக பேசுகிறீர்கள் என சொல்லி சண்டை போடுகிறார். ஆனால் பாட்டி அவளை சமாளிக்கிறார். ஜோசியர் சொன்னது போல எனக்கு உயிர் முக்கியம், நான் இருந்தால் தானே உனக்கு எதாவது செய்ய முடியும் என சொல்லிஅனுவை சமாளித்து அனுப்பி வைக்கிறார்.

அடுத்த செய்தி