ஆப்நகரம்

ரோஜாவை சுட்டு கொல்ல குறி வைக்கும் சாக்சி: ரோஜா சீரியலில் இன்று

ரோஜா சீரியலில் இன்று ரோஜாவை சுட்டு கொள்ள முயற்சிக்கிறார் சாக்ஷி

Samayam Tamil 6 Mar 2021, 11:27 pm
'சரஸ்வதி தான் செண்பகம்' னு எத வச்சு சொல்ற என திவ்யா, சாக்சியிடம் கேட்க, செண்பகம் உருவத்துல இருக்க இவ, செண்பகம் இல்லைன்னா, இவள செண்பகமா அந்த வீட்டுக்குள்ள அனுப்பி, நம்ம நினைச்சத சாதிச்சுக்கலாம்.. அத வச்சு ரோஜா , அர்ஜுன் இரண்டு பேரையும் தீர்த்து கட்டலாம் என இருவரும் பேசி கொள்கின்றனர். இதை அனைத்தையும் கேட்டு கொண்டிருக்கிறாள் செண்பகம்.
Samayam Tamil Roja Serial


இதனிடையில் அன்னப்பூரணியை அழைத்து கொண்டு ஆஸ்பத்திரிக்கு செல்கிறாள் ரோஜா. வீட்டிற்கு வரும் யசோதா, அம்மா எங்கே.? என கேட்க, ரோஜாவோடு ஆஸ்பிட்டலுக்கு செக்கப் போயிருக்காங்க என்கிறாள் கல்பனா. அதை தொடர்ந்து அனுவிடம் இந்த விசயத்தை சொல்கிறாள் யசோதா. உடனே சாக்சிக்கு போன் செய்து, 'நம்ம ரொம்ப நாளா, எதிர்பார்த்த வாய்ப்பு இப்ப கிடைச்சு இருக்கு' . ரோஜா அன்னப்பூரணி யோட ஹாஸ்பிட்டல் போறா, நம்ம ஆளுங்கள அனுப்பி அவ கதைய தீர்த்து கட்டிரு என்கிறாள் அனு.

அதை தொடர்ந்து செண்பகத்தை தனது ஆடியாட்கள் கஸ்டடியில் விட்டுவிட்டு எஸ். ஏ. ஹாஸ்பிட்டலுக்கு தனது ஆட்களுடன் செல்கிறார்கள் சாக்சியும், திவ்யாவும். இதனிடையில் கட்டி போடப்பட்டிருக்கும் செண்பகம், அடியாளை அடித்து போட்டு தப்பித்து செல்கிறாள்.அன்னப்பூரணி ரோஜாவை தனது ஆட்டோவில் ஏற்றும் சாக்சியின் அடியாள், அவள் சொன்ன இடத்தில் வண்டியை நிப்பாட்டி விட்டு செல்கிறான்.

ஆட்டோக்காரனை தேடி கீழே இறங்கும் அன்னப்பூரணியும், ரோஜாவும் அவன் இல்லாததால் வேறு ஆட்டோ தேடுகின்றனர். அப்போது ரோஜாவை கொல்ல தயாராகின்றனர் கொலையாளிகள். சாக்சியும், திவ்யாவும் இடத்திற்கு வந்து சேர்கின்றனர். இதனிடையில் அடியாட்களிடம் இருந்து தப்பிக்கும் செண்பகம்.., ரோஜா, அன்னப்பூரணி இருக்கும் இடத்திற்கு வந்து விடுகிறாள்.

தனது அம்மா மற்றும் மகளை பார்க்கும் செண்பகம், அவர்கள் அருகில் சென்று கட்டி பிடித்து ரோஜா தான் தன்னுடைய மகள் என்று அன்னப்பூரணியிடம் சொல்வதை போல் நினைத்து பார்க்கிறாள்... இதனிடையில் ரோஜாவை நோக்கி துப்பாக்கியில் குறி வைக்கும் சாக்சியை பார்த்து விடும் செண்பகம், ஓடி சென்று பின்னாடியில் இருந்து அவளை தள்ளிவிடுகிறாள்.. இதனால் குறி தவறி வேறு இடத்தில் வெடிக்கிறது. இதனால் ரோஜாவும், அன்னப்பூரணியும் அதிர்ச்சி அடைகின்றனர். துப்பாக்கியை தட்டிவிட்ட செண்பகத்தை கம்பியால் மண்டையில் அடிக்கின்றனர்.

திரும்பவும் ரோஜாவை நோக்கி சாக்சி சுட தயாராக, அதற்குள் அர்ஜுன் சம்பவ இடத்திற்கு வந்து விடுகிறான். சாக்சியின் அடியாட்கள் ரோஜா மற்றும் பாட்டியை தாக்க வர்ற, அவர்கள் அனைவரையும் அடித்து போட்டு ரோஜா மற்றும் அன்னப்பூரணியை காரில் அழைத்து செல்கிறான். இதனிடையில் அடிப்பட்டு மயக்கமடைந்து விழுந்து கிடக்கும் செண்பகத்தை தாண்டி அர்ஜுனின் கார் செல்கிறது. இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.

அடுத்த செய்தி