ஆப்நகரம்

நள்ளிரவில் பர்த்டே பேபி ஆல்யா மானசாவுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த சஞ்சீவ் கார்த்திக்

தன் மனைவி ஆல்யா மானசாவின் பிறந்தநாளுக்கு நள்ளிரவில் சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அசத்தியுள்ளார் சஞ்சீவ் கார்த்திக்.

Samayam Tamil 27 May 2020, 12:15 pm
ராஜா ராணி தொடரில் அப்பாவி செம்பாவாக நடித்து பிரபலமானவர் ஆல்யா மானசா. அந்த தொடரில் தனக்கு கணவராக நடித்த சஞ்சீவ் கார்த்திக்கை காதலித்து கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். ஆல்யாவின் பிறந்தநாள் அன்று சிம்பிளாக திருமணம் செய்து கொண்டதாக சஞ்சீவ் கார்த்திக் இன்ஸ்டாகிராமில் புகைப்படத்துடன் தெரிவித்த பிறகே அனைவருக்கும் அந்த விஷயம் தெரிய வந்தது.
Samayam Tamil alya manasa


ஆல்யாவுக்கு டிவி நிகழ்ச்சியில் அத்தனை பேர் முன்பு பிரமாண்டமாக ப்ரொபோஸ் செய்த சஞ்சீவ் திருமணத்தை மட்டும் ஏன் இப்படி ரகசியமாக நடத்தினார் என்று ரசிகர்கள் வருத்தப்பட்டார்கள். இந்நிலையில் ஆல்யாவின் அடுத்த பிறந்தநாளும் வந்துவிட்டது.
இன்று பிறந்தநாள் கொண்டாடும் ஆல்யா மானசாவுக்கு ரசிகர்களும், சின்னத்திரை பிரபலங்களும் சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். முன்னதாக நேற்று இரவு 11.55 மணிக்கு இன்ஸ்டா லைவில் வரப் போவதாக சஞ்சீவ் தெரிவித்தார். இதையடுத்து சஞ்சீவ் ஆல்யாவுக்கு ஏதோ சர்பிரைஸ் வைத்திருக்கிறார் என்பதை புரிந்து கொண்டு ரசிகர்கள் தூங்காமல் காத்திருந்தார்கள்.

நள்ளிரவு 12 மணிக்கு ஆல்யா மானசாவுக்கு சர்பிரைஸ் பார்ட்டி கொடுத்து அவரை திக்குமுக்காடச் செய்துள்ளார் சஞ்சீவ் கார்த்திக். லாக்டவுனை மனதில் வைத்து வீட்டின் மொட்டை மாடியில் தான் கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் ஆல்யா. நள்ளிரவில் தன் பப்பு சஞ்சீவ், குழந்தை அய்லா செய்யது, அம்மா உள்ளிட்டவர்களுடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துள்ளார். அந்த புகைப்படங்களை சஞ்சீவ் இன்ஸ்டாகிராமில் போஸ்ட் செய்துள்ளார்.
View this post on Instagram Happy birthday papu and Happy 1st anniversary 😘😘😘 Love u so much😘😘😘 A post shared by sanjeev (@sanjeev_karthick) on May 26, 2020 at 1:44pm PDT
புகைப்படங்களை வெளியிட்டு ஆல்யாவுக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளதுடன், முதலாவது திருமண நாள் வாழ்த்தும் கூறியுள்ளார் சஞ்சீவ். தன் பிறந்தநாள் கொண்டாட்ட புகைப்படங்களை போஸ்ட் செய்ய காத்திருப்பதாக கூறிய ஆல்யா இதுவரை எந்த புகைப்படத்தையும் வெளியிடவில்லை. அவர் வெளியிடும் புகைப்படங்களை பார்க்க ரசிகர்கள் ஆவலாக உள்ளனர்.

ஆல்யா மானசா எப்பொழுது தன் செல்ல மகளின் புகைப்படத்தை வெளியிட்டாலும் முகம் தெரிவது இல்லை என்பது தான் ரசிகர்களின் வருத்தம். குட்டிப் பப்புவின் முகம் தெரியும் வகையில் புகைப்படங்களை வெளியிடுமாறு ரசிகர்கள் ஆல்யா மற்றும் சஞ்சீவ் கார்த்திக்கிற்கு அன்பு கோரிக்கை விடுத்துள்ளனர்.

முன்னதாக ஆல்யா கர்ப்பமாக இருந்தபோது பிரசவத்திற்கு முந்தைய நாள் வரை வேலை பார்த்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த ஆல்யா விளம்பர படத்தில் நடித்தபோது எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளத்தில் வெளியிட்டார். அதை பார்த்த ரசிகர்கள் கடுப்பாகி, சஞ்சீவ் கார்த்திக்கை திட்டினார்கள். யோவ், ராஜா ராணி சீரியல் மாதிரி இல்லாமல் நிஜத்திலாவது ஆல்யாவை பத்திரமாக பார்த்துக் கொள்ளுங்கள். இன்னைக்கோ, நாளைக்கோ பிரசவம் என்று இருக்கும் பெண்ணை இப்படி வேலை செய்ய விடலாமா என்று கேள்வி எழுப்பினார்கள்.

எப்பொழுதும் பிசியாக இருந்து பழகிய ஆல்யாவால் சும்மா இருக்க முடியவில்லை. அதனால் தான் குழந்தை பெறும் வரை வேலை பார்த்தார். ஆனால் ரசிகர்களோ சஞ்சீவ் மீது கோபித்துக் கொண்டார்கள். குழந்தை பிறந்த கையோடு ஆல்யா சில நிறுவனங்களின் பொருட்களை இன்ஸ்டாகிராமில் விளம்பரம் செய்யும் வேலையை துவங்கிவிட்டார்.

ஆல்யாவுக்கு மெர்சிடீஸ் பென்ஸ் கார் வாங்க வேண்டும் என்று ஆசை. அந்த ஆசை அவருக்கு குழந்தை பிறப்பதற்கு முந்தைய நாள் நிறைவேறியது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி