ஆப்நகரம்

நன்றி கெட்டவனுக்கு தேடிப்போய் உதவி செஞ்சா என்ன பேரு தெரியுமா? ராஜா ராணி 2ல் புது பிரச்சனை

ராஜா ராணி 2ல் இன்று சந்தியா ஆதிக்கு ரகசியாமாக செய்த உதவியை சரவணன் பார்த்துவிடுகிறார்.

Samayam Tamil 20 Apr 2021, 2:51 am
ராஜா ராணி 2ல் இத்தனை நாள் மாமியார் மருமகள் சண்டை தான் ஓடிக்கொண்டிருந்தது. ஆனால் தற்போது கணவன் மனைவி சண்டை தொடங்கி இருக்கிறது.
Samayam Tamil saravanan angry over sandhiya for helping aadhi
நன்றி கெட்டவனுக்கு தேடிப்போய் உதவி செஞ்சா என்ன பேரு தெரியுமா? ராஜா ராணி 2ல் புது பிரச்சனை


படிக்க பணம் கேட்கும் ஆதி

இதற்கு முன் சந்தியாவிடம் பணம் வாங்கி அதை வைத்து லேப்டாப் வாங்கிவிட்டு அந்த பழியை சந்தியா மீது தூக்கி போட்ட ஆதி, தற்போது அம்மா சிவகாமியிடம் சென்று தான் கோர்ஸ் படிக்கப்போகிறேன், அதற்காக மாதம் 8 ஆயிரம் செலவாகும் என சொல்கிறார்.

"இப்படி சொல்லி இதற்கு முன் பலமுறை பணம் வாங்கி இருக்கிறாய், என்ன படிச்சி இருக்க, ஊதாரியா ஊரை சுற்றிக்கொண்டு இருப்பது. 8000 ருபாய் சம்பாதிப்பது எவ்வளவு கஷ்டம் என உனக்கு தெரியுமா?" என திட்ட ஆரம்பிக்கிறார்.

பணம் கொடுக்கும் சந்தியா

ஆதியை சிவகாமி திட்டுவதை பார்த்த சந்தியா, ஆதியை அழைத்து அவர் கையில் 8000 ரூபாய் பணம் கொடுக்கிறார். நிஜமாவே படிக்க தானே போகிறாய், அதற்கான விருப்பம் இருக்கும்போதே தேவையானதை செய்துவிட வேண்டும் என சொல்கிறார். அதை வாங்க மறுக்கிறார் ஆதி. ஆனால் சந்தியா கட்டாயப்படுத்தி அவரது கையில் பணத்தை கொடுக்கிறார்.

அதை சரவணன் உள்ளே இருந்து பார்த்துவிடுகிறார். கோபத்துடன் கடைக்கு செல்கிறார்.

இளிச்சவாயன் என சொல்வார்கள்

அதன் பின் இரவு வீட்டுக்கு வரும் சரவணனிடம் என்ன விஷயம் என கேட்கிறார். 'ஒருவருக்கு உதவி செய்தால், அதை வாங்குபவர் நன்றி உடன் இருக்கவேண்டும். ஆனால் உதவியும் வாங்கிக்கொண்டு நமக்கு திரும்பி ஆப்பு வைப்பவனுக்கு மீண்டும் தேடி போய் உதவி செய்தால் இளிச்சவாயன் என சொல்வாங்க' என மறைமுகமாக கூறுகிறார் சரவணன்.

ஆதி வந்து உங்களிடம் காசு கேட்டான. இப்படி செய்தால் அம்மாவிடம் உங்களால் நல்ல பெயர் வாங்க முடியாது என கோபத்துடன் கூறிவிட்டு செல்கிறார்.

மறுநாளும் அவரது கோபம் அப்படியே தான் இருக்கிறது. சமாதானப் படுத்த சந்தியா முயற்சித்தாலும் அது வீண் தான். இனி என்ன நடக்கும் என்பது அடுத்தடுத்த எபிசோடுகளில் தான் நடக்கும்.

அடுத்த செய்தி