ஆப்நகரம்

குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சரவணன், சந்தியா

திருமணம் நல்லபடியாக நடந்தால் குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது சிவகாமியின் வேண்டுதல். அதை நிறைவேற்ற அனைவரும் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார்கள்.

Samayam Tamil 1 Dec 2020, 4:46 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சரவணனுக்கு நல்லபடியாக திருமணம் நடந்து முடிந்தால் அவர் மனைவியோடு குலதெய்வ கோவிலுக்கு செல்ல வேண்டும் என்பது சிவகாமியின் வேண்டுதல். வேண்டுதலை நிறைவேற்ற அனைவரும் புறப்படுகிறார்கள். கோவிலுக்கு செல்ல பிடிக்காத அர்ச்சனா பொய் சொல்லிவிட்டு வீட்டிலேயே இருந்துவிடுகிறார்.
Samayam Tamil குடும்பத்தோடு குலதெய்வ கோவிலுக்கு செல்லும் சரவணன், சந்தியா


நம்மை விட்டால் போதும் என்று காத்திருந்த பார்வதியும், அர்ச்சவும் அவர்கள் சென்றதும் குத்தாட்டம் போட்டு குதூகலமாக இருக்கிறார்கள். பிறகு பார்வதியும், அவரது அண்ணனும் நண்பர்களை பார்க்கச் சென்றுவிடுகிறார்கள். அர்ச்சனா இப்போது தான் கணவனுடன் நான் நேரம் செலவிடமுடியும் என மகிழ்ச்சியில் இருக்கிறார்.

இதற்கிடையில் சந்தியா, சரவணன் என அனைவரும் பேருந்தில் கோவிலுக்கு சென்று கொண்டிருக்கிறார்கள். கூட்டநெரிசலாக இருந்ததால் சரவணனும், சந்தியாவும் படியில் தொங்கிக் கொண்டே செல்கிறார்கள்.

ஒரு வழியாக சரவணன், சந்தியா இருவருக்கும் இடம் கிடைத்து அமர்கிறார்கள். சிவகாமி தான் அமர்ந்த இடத்தை பார்த்துக்கொள்ளும்படி சந்தியாவிடம் கூறி விட்டு வெளியே செல்கிறார். அப்பொழுது சந்தியா சொல்லச் சொல்ல கேட்காமல் ஒரு பெண் வந்து சிவகாமியின் இடத்தில் அமர்ந்து கொள்கிறார்.

அதனால் கோபமடைந்த சந்தியா அவருடன் சண்டை போடுகிறார். ஆனால் அவர் கேட்காமல் அடாவடியாக பேசுகிறார். சிவகாமி வந்ததும் என்ன நடந்தது என தெரியாமல் சந்தியாவை திட்டுகிறார். சந்தியா இடம் போய்விட்டதே என கோபத்தில் இருக்கும்போது, சரவணன் சந்தியாவிடம் என்ன நடந்தது என்று கேட்டுக்கொண்டிருக்கும் நேரத்தில் வேறொருவர் அவரிடத்தில் உட்கார்ந்து விடுகிறார். அதனால் மேலும் கோபமடைகிறார் சிவகாமி.

இதற்கிடையே அர்ச்சனா மாடர்னாக உடை அணிந்து, வீடியோ எடுத்து தன் கணவனுக்கு அனுப்பி வைக்கிறார். அதைப் பார்த்ததும், கடையில் இருந்த செந்தில் உடனே வீட்டுக்கு வருகிறார். வந்து தன் மனைவியின் அழகை வர்ணித்து பேசி, ஆட்டம் பாட்டம் என இருவரும் சந்தோஷமாக இருக்கிறார்கள்.

அதே நேரத்தில் சரவணன், சந்தியாவுக்கு உட்கார இடம் இல்லாததால், பேருந்தின் மேலே அமரும்படி கூறுகிறார் சிவகாமி. இருவரும் மேலே அமர்கிறார்கள். தூக்கத்தில் சந்தியா, சரவணன் மீது சாய்கிறார். சரவணன் மகிழ்ச்சியில் சந்தியாவை பார்த்து ரசித்துக் கொண்டே வருகிறார்.

ரோஜாவை ஏற்றுக் கொள்வாரா துரைசிங்கம்?: செந்தூரப்பூவே அப்டேட்

அடுத்த செய்தி