ஆப்நகரம்

பார்வதியை கைது செய்த போலீஸ்! செம்பருத்தி சீரியலில் அதிர்ச்சி திருப்பம்

ஹோட்டலில் ஒருவன் தவறான வீடியோ எடுத்ததை தட்டி கேட்கிறார் பார்வதி. ஆனால் போலீஸ் வந்து பார்வதி மற்றும் ஐஸ்வர்யா இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு கூட்டி செல்கிறது.

Samayam Tamil 13 Apr 2021, 10:17 pm
செம்பருத்தி சீரியலில் நேற்று சுந்தரம் டைனிங் டேபிளில் உட்கார்ந்து சாப்பிட்டதால் ஒரு பெரிய பிரச்னையை உண்டாகிவிட்டது. அதன்பின் சுந்தரம் தனக்கு டிரைவர் ஆக இருக்க வேண்டாம் என அகிலா கூற, சுந்தரம் கெஞ்சி அந்த வேலையை மீண்டும் வாங்குகிறார்.
Samayam Tamil sembaruthi serial episode 1005 parvathy and aiswarya arrested by police
பார்வதியை கைது செய்த போலீஸ்! செம்பருத்தி சீரியலில் அதிர்ச்சி திருப்பம்



ஹோட்டலில் பார்வதி, ஐஸ்வர்யா

வெளியில் ஒரு வேலையாக வந்திருக்கும் ஐஸ்வர்யா மற்றும் பார்வதி இருவரும் அந்த வேலையை முடித்துவிட்டு ஹோட்டலுக்கு ஜூஸ் குடிக்க செல்கின்றனர். ஜூஸ் வேண்டாம், தாமதம் ஆகிறது, அம்மா காத்திருப்பார் என பார்வதி முதலிலேயே சொல்கிறார்.

ஆனால் அரை மணி நேரத்தில் வந்துவிடுவதாக ஏற்கனவே அம்மாவிடம் சொல்லிவிட்டேன், அதனால் ஜூஸ் குடித்துவிட்டு போகலாம் என கூறுகிறார் ஐஸ்வர்யா.

தவறாக வீடியோ எடுக்கும் எம்எல்ஏ மகன்

அந்த நேரத்தில் எம்எல்ஏ மகன் தனது நண்பர்களுடன் அந்த ஹோட்டலுக்கு வருகிறார். அருகில் ஐஸ்வர்யா அமர்ந்திருக்கும் நிலையில் எம்எல்ஏ மகன் தனது போனில் அவரை தகாத வகையில் வீடியோ எடுக்கிறார்,.

பார்வதி அதனை பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.

கன்னத்தில் அறையும் பார்வதி

சற்று நேரம் பார்த்துவிட்டு அங்கு செல்லும் பார்வதி அவனது கன்னத்தில் இரண்டு முறை அறைகிறார். அங்கு வரும் மேனேஜர் என்ன பிரச்சனை என கேட்கிறார். பார்வதி உடனே போலீசை கூப்பிடுங்கள் என சொல்கிறார்.

அவரும் போன் செய்த உடன் போலீசும் வந்து சேர்கிறது. போலீஸ் வரும் முன்பே அவன் வீடியோவை போனில் இருந்து டெலிட் செய்து விடுகிறான்.

போலீஸ் ஸ்டேஷனில் பார்வதி, ஐஸ்வர்யா

இன்ஸ்பெக்டர் வந்த உடன் அந்த பையனை இரண்டு முறை அறைகிறார். அதற்கு பிறகு தான் பேசவே தொடங்குகிறார். அவன் போனில் வீடியோ எடுத்ததாகவும், அவனது போனை வாங்கி பாருங்கள் எனவும் கூறுகிறார். ஆனால் அவர் வாங்கி பார்க்கும்போது அதில் எதுவும் இல்லை.

உடனே பார்வதி பக்கம் திரும்புகிறார் இன்ஸ்பெக்டர். அவர்களை போலீஸ் ஸ்டேஷனுக்கு அழைத்து செல்கிறார்.

மன்னிப்பு கேட்கிறீர்களா, கோர்ட்டுக்கு போகிறீர்களா என கேட்கிறார் இன்ஸ்பெக்டர். இதனுடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி