ஆப்நகரம்

பார்வதியை தேடி அலையும் ஆதி, பெரிய வாய்ப்பை இழந்துவிடுவாரா?: செம்பருத்தி சீரியலில் இன்று

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி மற்றும் அருண் இருவரும் பார்வதியை தேடி செல்லும் நிலை ஏற்படுகிறது.

Samayam Tamil 10 Mar 2021, 11:08 pm
செம்பருத்தி நேற்றைய எபிசோடில் அகிலா வீட்டில் இருக்கும் அனைவரையும் எச்சரித்து அனுப்புகிறார். அதனால் பார்வதி பாத பூஜை செய்ய வேண்டும் என்கிற ஆசை நிறைவேறாமல் போய்விடும் என வருத்தத்தில் இருக்கின்றனர் ஐஸ்வர்யா, அருண் உள்ளிட்டவர்கள்.
Samayam Tamil sembaruthi serial episode 976 written update aadhi in search of parvathy
பார்வதியை தேடி அலையும் ஆதி, பெரிய வாய்ப்பை இழந்துவிடுவாரா?: செம்பருத்தி சீரியலில் இன்று


பார்வதியை கோவிலுக்கு அனுப்பிய ஐஸ்வர்யா

அதன் பின் ஐஸ்வர்யாவை அழைத்த குருஜி கலசத்தை கொடுத்து அதை கோவிலில் அம்மனுக்கு அபிஷேகம் செய்து விட்டு வரும்படி சொல்கிறார். ஆனால் ஐஸ்வர்யா வெளியில் வந்து அதை பார்வதி கையில் கொடுத்து கோவிலுக்கு சென்று வரும்படி சொல்கிறார்.

அவருக்கு அதை உடனே வாங்கிக்கொண்டு சென்றுவிடுகிறார்.

பூஜை

அதன் பின் பூஜை அறையில் பூஜை தொடங்குகிறது. அகிலா மற்றும் கணவர் மாலை மாற்றிக்கொண்டு பாத பூஜைக்காக நிற்கின்றனர். அப்போது பார்வதி எங்கே என குருஜி கேட்கிறார். அவர் கோவிலுக்கு சென்றிருப்பதாக ஆதி கூற, ஐஸ்வர்யாவை அழைக்கும் படி அருணிடம் அகிலா கூறுகிறார்.

ஆனால் அவர் பூஜை அறைக்கு வர கூடாது என்று அருண் பதில் அளிக்கிறார். வனஜா, நான் செய்யட்டுமா என கேட்க, பாத பூஜையை தம்பதிகளாக தான் செய்ய வேண்டும் என குருஜி சொல்லிவிடுகிறார்.

பார்வதியை தேடி அலையும் ஆதி

இன்னும் நல்ல நேரம் இருப்பதால் ஆதியே நேரில் சென்று பார்வதியை அழைத்து வருவதாக கூறி கிளம்புகிறார். அவர் கோவிலுக்கு செல்லும்போது பார்வதி பூஜையை முடித்து கோவிலை சுற்றிக்கொண்டு இருக்கிறார். அதனால் பார்வதி ஆதி கண்களில் படவில்லை.

அதன் பின் அருகில் இருக்கும் வேறு கோவிலில் பார்வதி இருக்கிறாரா என பார்க்க ஆதி செல்கிறார். அருணும் பார்வதியை தேடி வருகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

அடுத்த செய்தி