ஆப்நகரம்

Sembaruthi Serial: தொடங்கிய சொர்ணபுரி வைர ஏலம்.. ஆதி போட்ட திட்டம் நிறைவேறுமா?

சொர்ணபுரி வைர நெக்லஸை ஏலம் விட்டு 10 கோடியை வில்லன் மேத்தாவிடம் இருந்து வாங்க ஆதி போட்டிருக்கும் திட்டம் நினைத்தபடி நடக்குமா?

Samayam Tamil 16 Jun 2021, 7:21 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் ஆதி மற்றும் அருண் இருவரும் மேத்தாவின் வீட்டுக்குள் நுழைந்து சில டாக்குமென்ட்களை திருடிக்கொண்டு வருகிறார்கள் அதற்கு பிறகு மறுநாள் நடக்க இருக்கும் ஏலத்திற்கான ஏற்பாடுகளை அவர்கள் செய்கிறார்கள்.
Samayam Tamil sembaruthi serial june 16 written update will aadhis plan workout
Sembaruthi Serial: தொடங்கிய சொர்ணபுரி வைர ஏலம்.. ஆதி போட்ட திட்டம் நிறைவேறுமா?



ஏலத்திற்கு எல்லாம் ரெடி

இன்னும் சற்று நேரத்தில் ஏலம் தொடங்க இருப்பதால் அங்கு இருக்கும் அனைவரையும் தயாராக சொல்கிறார் ஆதி. அதன்படி ஏற்பாடு செய்திருக்கும் ஜூனியர் ஆர்டிஸ்ட்டுகள் அனைவருக்கும் மேக்கப் போட்டு பணக்காரர்கள் போன்ற தோற்றத்தில் வருகிறார்கள். அருண் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் ராஜஸ்தானை சேர்ந்த ராஜபுத்திர ராஜ வம்சத்தினர் போல உடை அணிந்து வருகிறார்கள். ஆதி மற்றும் பார்வதி ஆகியோரும் தயாராக இருக்கிறார்கள்.

ஆதி பார்வதி என்ன செய்யப் போறாங்க?

அருண் மற்றும் ஐஸ்வர்யா ராஜா ராணியாக நடிக்கிறார்கள், ராம் ஏலம் நடத்தும் நபராக நடிக்கிறார். ஆதி மற்றும் பார்வதி என்ன செய்யப் போகிறார்கள்? என இது வரை சொல்லவே இல்லையே என ராம் கேட்கிறார். ஐஸ்வர்யாவும் அதே கேள்வியைகேட்கிறார்.

என்ன செய்தால் விளக்கு வேகமாக எரியுமோ அதை செய்யபோவதாக ஆதி கூறுகிறார். மேத்தாவை தூண்டிவிடும் வேலை செய்யப்போவதாக தான் மறைமுகமாக சொல்கிறார் ஆதி. அதற்கு பிறகு ஒவ்வொருவராக ஏலம் நடக்கும் இடத்திற்கு செல்கிறார்கள். மேத்தாவும் அங்கு வந்து சேர்கிறார். அவரது அடியாட்களை கீழே விட்டுவிட்டு வருகிறார் அவர். மேத்தா வந்து அமர்ந்த பிறகு தான் ஆதி பார்வதி இருவரும் வந்து நிற்கிறார்கள்.

ஆதி - மேத்தா வாக்குவாதம்

உன் குடும்ப மானத்தை காப்பாற்ற எதுவும் செய்யாமல் இப்படி ஏலத்துக்கு வந்திருப்பது ஏன் என ஆதியை கேட்கிறார் மேத்தா. நீ முக்கியமாக கருதும் இந்த சொர்ணபுரி வைரத்தை உனக்கு கிடைக்க விடமாட்டேன் என சொல்கிறார் ஆதி.

ஆதி இப்படி மேத்தாவி சீண்டியதால் அவர் இன்னும் அதிகமாக வெறியில் ஏலம் கேட்பார் என எதிர்பார்க்கலாம்.

வைரத்தை சோதித்து ஏலம் கேட்கும் மேத்தா

ஏலம் தொடங்கும் நேரத்தில் வைர நகையை சோதிக்க வேண்டும் என விரும்புபவர்கள் சோதிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது. மேத்தா உடனே எழுந்து சென்று அந்த வைரத்தை பார்க்கிறார். லென்ஸ் மற்றும் டார்ச் லைட் உள்ளிட்டவற்றைக் கொண்டு அது உண்மையானது தானா என சோதிக்கிறார். அதற்கு பிறகு திருப்தி அடைந்து வந்து அமர்கிறார்.

அதன் பின்னர் ஏலம் தொடங்குகிறது. ஆரம்ப விலை ஒரு கோடி என அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொருவரும் போட்டி போட்டுக்கொண்டு விலை கேட்க தொடங்குகிறார்கள். மற்றவர்கள் 2 கோடி 3 கோடி என கேட்டால் மேத்தா நேராக 5 கோடி என கேட்கிறார்.

அதற்கு பிறகு ஆதி ஏழு கோடி எனக் கேட்க மேத்தா 9 கோடி என சொல்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு முடிவுக்கு வந்தது. இன்னும் எத்தனை கோடி கொடுத்து அந்த நகையை ஏலம் எடுக்க போகிறார் ஆதி என்பது நாளைய எபிசோடில் தான் தெரியும்.

அடுத்த செய்தி