ஆப்நகரம்

ஆதி போட்ட திட்டம் வீண்! பார்வதி இப்படி பண்ணிட்டாரே! செம்பருத்தி சீரியலில் இன்று..

செம்பருத்தி சீரியலில் அகிலா திருமண நாள் விழாவுக்கு பார்வதிக்கு விலையுயர்ந்த புடவை வாங்கி வைக்கிறார் ஆதி, ஆனால் அதை கட்ட முடியாது என மறுக்கிறார் பார்வதி.

Samayam Tamil 11 Mar 2021, 11:32 pm
செம்பருத்தி சீரியலின் நேற்றைய எபிசோடில் கோவிலுக்கு சென்ற பார்வதி வரவில்லை என அவரை தேடி ஆதி மற்றும் அருண் இருவரும் தேடி செல்கின்றனர்.
Samayam Tamil sembaruthi serial march 11 written update parvathy refuses to wear saree given by aadhi
ஆதி போட்ட திட்டம் வீண்! பார்வதி இப்படி பண்ணிட்டாரே! செம்பருத்தி சீரியலில் இன்று..



திரும்பி வந்த பார்வதி

ஆதி மற்றும் அருண் இருவரும் தேடியும் அவர் கிடைக்காததால் அவர்கள் வீட்டுக்கு திரும்புகின்றனர். அங்கு அனைவரும் மிகவும் எதிர்பார்ப்புடன் பார்வதியாக காத்திருக்கின்றனர். எங்கு தேடியும் பார்வதி கிடைக்கவில்லை என அவர்கள் சொல்கின்றனர். இன்னும் நல்ல நேரம் முடிய நேரம் இருக்கிறது என குருஜி சொல்லிக்கொண்டு இருக்கும் நேரத்தில் பார்வதி சரியாக கலசத்துடன் வீட்டுக்குள் வருகிறார்.

பாத பூஜை

அதன் பின் பார்வதி மற்றும் ஆதியை அழைத்து அகிலாவுக்கு பாதபூஜை செய்ய சொல்கிறார்கள். அதனால் மகிழ்ச்சியான பார்வதி இது தனக்கு கிடைத்த பாக்கியம் என சொல்லி ஆதி உடன் சேர்ந்து பாதபூஜை செய்கிறார். ஆதி பார்வதியை அவர்கள் வாழ்த்துகின்றனர்.

அதன் பின் அருண் அகிலாவை வெளியில் அழைத்து சென்றுவிடுகிறார்.

ஆதி போட்ட பிளான்

திருமண நாள் விழாவுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அனைவரும் தயாராகி கொண்டிருக்கும்போது பார்வதி சாதாரண ஒரு புடவையில் வந்து நிற்கிறார். அவர் மீது டீயை ஊற்றிவிடும் ஆதி, தெரியாமல் பட்டுவிட்டது உடனே சென்று சேலையை மாற்றி வா என சொல்கிறார்.

அதற்கு முன்பே அவர் மற்ற சேலைகளை எல்லாம் தண்ணீரில் ஊறவைத்து விட்டு, ஒரு விலையுயர்ந்த சேலையை வாங்கி அங்கு வைத்துவிட்டு வந்திருக்கிறார்.

ஆதி கொடுத்த புடவையை காட்டாத பார்வதி

பார்வதி அறைக்கு சென்று பார்த்த போது, அங்கு புடவைகள் தண்ணீரில் இருப்பதை பார்த்து அது ஆதியின் வேலை தான் என்பதை உணர்கிறார். அதன் பின் வேறு ஒரு சேலையை கட்டிக்கொண்டு வந்து அவர் ஆதி முன்பு நிற்கிறார்.

எனக்கு ஏன் விலையுயர்ந்த சேலையை வாங்கி வைத்தீர்கள் என கேட்கிறார். இதை கட்டிக்கொண்டு grand ஆக வரவேண்டும் என்பது தான் எனது ஆசை என கூறுகிறார் ஆதி.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. இனி என்ன நடக்கும் என நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி