ஆப்நகரம்

Sembaruthi: ஆதி போடும் மாஸ்டர் பிளான்! செம்பருத்தி சீரியலில் இன்று

மேத்தாவை ஏமாற்றி அவரிடம் இருந்து 10 கோடி ருபாய் பணத்தை வாங்க திட்டம் போடுகிறார் ஆதி.

Samayam Tamil 10 Jun 2021, 5:40 pm
அகிலாவின் பெயரை கெடுக்கும் விதமாக ஆதிக்கடவூர் டிரஸ்ட் பெயரில் பொய்யாக மோசடி செய்தது யார் என விசாரிக்க ஆதி மற்றும் பார்வதி இருவரும் பெங்களூரு சென்றிருக்கின்றனர். அங்கு அவர்கள் வருமான வரித்துறை அலுவலகத்தில் விசாரிக்கின்றனர். அங்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் ரகுநாத் மேத்தா அறைக்கு சென்று அவர் விசாரிக்கிறார்.
Samayam Tamil sembaruthi serial today aadhi plans to use family owned rare diamond to cheat mehta
Sembaruthi: ஆதி போடும் மாஸ்டர் பிளான்! செம்பருத்தி சீரியலில் இன்று



நந்தினிக்கு போன் செய்யும் மேத்தா

தனது அலுவலகத்திற்கு வந்த ஆதியிடம் மேத்தா சவால் விடும் வகையில் பேசுகிறார். நான் தான் செய்தேன் என்ன முடியுமோ செய்துகொள் என கூறிவிடுகிறார். அதன் பின் ஆட்களை வைத்து ஆதியை வெளியில் துரத்துகிறார்.

இந்த விஷயம் பற்றி நந்தினிக்கு போன் செய்து கூறுகிறார் மேத்தா. அவரும் இதை கேட்டு அதிகம் மகிழ்ச்சி அடைகிறார்.

ஆதியை சந்திக்க வரும் நபர்

மேத்தா அலுவலகத்தில் பணியாற்றும் ஒரு நபர் ஆதி தங்கி இருக்கும் ஹோட்டலுக்கு வருகிறார். அவரை அறிமுகப்படுத்திக்கொண்டு பேசும் அவர் மேத்தா பற்றி பல்வேறு ரகசியங்கள் சொல்கிறார். தான் ஆதிக்கடவூர் டிரஸ்ட் மூலமாக தான் படித்து வளர்ந்தேன் எனவும் கூறுகிறார் அவர்.

மேத்தா ஒரு மோசடிக்காரர் என சொல்லும் அவர், அடுத்து அவருக்கு ரிக்கும் வீக்னஸ் பற்றியும் சொல்கிறார். மேத்தாவுக்கு வைரங்கள் என்றால் அதிகம் பிடிக்கும் என்றும், பல விதமான வைரங்களை வாங்கி வீட்டில் வைத்திருக்கிறார் என்றும் சொல்கிறார். மேலும் அவர் சொர்ணபுரி வைரத்தை தான் தற்போது தேடிவருகிறார் என்றும் கூறுகிறார்.

ஆதி போடும் மாஸ்டர் பிளான்

நாம் சட்டப்படி நேர்மையாக இந்த பிரச்னையை சந்திக்க சென்றால் நீதி கிடைக்க தாமதம் ஆகும். ஆனால் தற்போது அம்மாவுக்கு தெரியாமல் இந்த பிரச்னையை தீர்க்க ஒரே ஒரு வழி தான் இருக்கிறது. மேத்தாவை நாம் ஏமாற்ற வேண்டும் என ஆதி கூறுகிறார்.

எப்படி என மற்றவர்கள் கேட்க மேத்தாவுக்கு சொர்ணபுரி வைரத்தை விற்று 10 கோடி ருபாய் வாங்கி இன்கம் டாக்ஸ் அலுவலகத்தில் கட்டிவிடலாம் என ஆதி சொல்கிறார்.

ஆனால் மேத்தா அலுவலகத்தில் இருந்து வந்த நபர்,'நீங்கள் பொய் வைரத்தை கொடுத்து மேத்தாவை ஏமாற்ற முடியாது' என சொல்கிறார். தான் ஒரிஜினல் வைரம் தான் காட்டப்போவதாக ஆதி கூறுகிறார். ஆதிக்கடவூர் பரம்பரை வைரத்தை ரிஸ்க் எடுத்து பயன்படுத்தி இந்த பிரச்சனையில் இருந்து வெளியில் வர போகிறோம் என திட்டத்தினை கூறுகிறார் ஆதி. இத்துடன் இன்றைய எபிசோடு முடிந்தது.

அடுத்த செய்தி