ஆப்நகரம்

சொர்ணபுரி வைரத்தை கொண்டு வந்த அருண், மேத்தாவை ஏமாற்ற சூப்பர் பிளான் சொன்ன ஆதி! செம்பருத்தி சீரியல் அப்டேட்

ஆதிக்கடவூர் பரம்பரையின் பொக்கிஷமான சொர்ணபுரி வைரத்தை பயன்படுத்தி வில்லன் மேத்தாவை ஏமாற்ற திட்டம் போடுகிறார் ஆதி.

Samayam Tamil 11 Jun 2021, 5:40 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் ரகுநாத் மேத்தாவை ஏமாற்றுவதற்காக ஆதி ஒரு திட்டத்தை கூறுகிறார். அதன் படி சொர்ணபுரி வைரத்தை கொண்டு அவரிடமிருந்து பத்து கோடி ரூபாயை வாங்க போகிறோம் என அவர் கூறுகிறார்.
Samayam Tamil sembaruthi serial today aadhi sends a fake news paper ad to mehtas office
சொர்ணபுரி வைரத்தை கொண்டு வந்த அருண், மேத்தாவை ஏமாற்ற சூப்பர் பிளான் சொன்ன ஆதி! செம்பருத்தி சீரியல் அப்டேட்


ஒரிஜினல் வைரம் தான்

மேத்தாவுக்கு வைரங்கள் பற்றி நன்றாகத் தெரியுமென்பதால் போலியான வைரத்தை கொடுத்து ஏமாற்றுவது சாத்தியமில்லை என அவரது அலுவலகத்தில் பணியாற்றும் நபர் கூறுகிறார். நான் பொய்யான வைரத்தை காட்டப்போவதில்லை என ஆதி கூறுகிறார்.

ஆதிக்கடவூர் பரம்பரையின் நெக்லஸ் ஒன்றை வைத்துத் தான் இதை செய்யப்போவதாக ஆதி கூறுகிறார். பார்வதியும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். நீங்கள் எந்த முடிவு எடுத்தாலும் அது சரியாகத்தான் இருக்கும் என ஆதிக்கு வழிமொழிந்தார் அவர். இதில் சிக்கல்கள் இருந்தாலும் எப்படியாவது பிரச்சனையை தீர்த்து விடலாம் என திட்டம் போடுகிறார் ஆதி. (Pic Credits: Zee5)

அருணை நெக்லஸ் கொண்டுவர சொல்லும் ஆதி

அருணுக்கு போன் செய்யும் ஆதி தான் போட்டு வைத்து உள்ள திட்டம் அனைத்தையும் கூறுகிறார். அதற்குப் பிறகு வீட்டில் அம்மா அறையில் இருக்கும் சொர்ணபுரி வைர நெக்லஸை எடுத்துக்கொண்டு பெங்களூர் வரும் படி கூறுகிறார்.

ஆதி சொன்னது போலவே அருணும் ஐஸ்வர்யாவும் அகிலா அறையிலிருந்து வைர நெக்லஸை எடுத்துக் கொண்டு விமானத்தில் பெங்களூர் வந்து சேர்கிறார்கள்.

பொய்யான விளம்பரம்

ரகுநாத் மேத்தாவை ஏமாற்றுவதற்காக நியூஸ் பேப்பரில் சொர்ணபுரி வைரங்கள் விற்பனைக்கு என்பது போல பொய்யான விளம்பரம் உருவாக்கி, அவரது அலுவலகத்தில் வைக்க திட்டமிடுகிறார் ஆதி.

ஒருவேளை உண்மையாகவே விளம்பரம் கொடுத்தால் ஊரில் இருக்கும் அனைத்து பணக்காரர்களும் வந்து விடுவார்கள், அதனால் நமக்கு சிக்கல் தான். அதனால் ரகுநாத் மேத்தா மட்டுமே வரும் வகையில் அவரது கண்ணில் மட்டும் படும் வகையில் ஒரு விளம்பரத்தை நியூஸ் பேப்பரில் ஒட்டி அவரது அலுவலகத்தில் வைத்து விடலாம் என கூறுகிறார் ஆதி.

ரகுநாத் மேத்தாவின் அலுவலகத்தில் பணியாற்றும் நபரும் அதற்கு ஒப்புக் கொள்கிறார். அவர் அந்த நியூஸ் பேப்பரை எடுத்துக் கொண்டு அலுவலகம் சென்று ரகுநாத் மேத்தாவின் அறையில் டேபிள் மீது வைத்து விடுகிறார். அந்த நேரத்தில் சரியாக மேத்தா ஆபீஸ் வந்து சேர்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது. இனி என்ன நடக்கும் என்பது அடுத்த எபிசோடில் தான் தெரியவரும்.

அடுத்த செய்தி