ஆப்நகரம்

Sembaruthi: வாய்பேச முடியாதவருக்கு வீட்டில் வேலை தரும் அகிலா! இதுவும் வில்லியின் சதியா?

தனது உயிரை காப்பாற்றிய நபர் தனது வேலை வேண்டும் என கேட்கும் நிலையில், அவரை தனது வீட்டுக்கே அழைத்து சென்று விடுகிறார் அகிலா.

Samayam Tamil 23 Jun 2021, 8:23 pm
செம்பருத்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் அகிலா கோவிலில் சாமி கும்பிட்டு கொண்டிருக்கும்போதே அவர் தலை மீது மரக்கிளை ஒன்று உடைந்து விழ இருக்கும் போது வாய் பேச முடியாத ஒருவர் வந்து காப்பாற்றுகிறார்.
Samayam Tamil sembaruthi serial today akhila brings home an unknown person who saved her
Sembaruthi: வாய்பேச முடியாதவருக்கு வீட்டில் வேலை தரும் அகிலா! இதுவும் வில்லியின் சதியா?



வேலை வேண்டும்

அந்த நபர் கண்ணத்தில் அகிலா பளார் என அறைத்து விடும் நிலையில் அதற்குப் பிறகுதான் அவர் வாய்பேச முடியாதவர் என்பதை அறிந்து வருத்தப்படுகிறார். உனக்கு என்ன வேண்டும் கேள் என அகிலா சொல்ல அவர் தனக்கு வேலை இல்லை என்றும் வேலை வேண்டும் எனவும் சொல்கிறார்.

அதனால் அவரை தன்னுடைய காரிலேயே கூட்டி செல்ல முடிவு செய்கிறார் அகிலா. ஆனால் அவர் தான் ஆட்டோவில் பின்தொடர்நந்து வருவதாக கூறி அவரது கார் பின்னாடியே வீட்டுக்கு சென்று சேர்கிறார்.

கெட்டுப்போன பால் - கெட்ட சகுனம் என நினைக்கும் பார்வதி

பார்வதி காபி போடுவதற்காக பால் அடுப்பில் வைக்கிறார். அதன் பிறகு அது கெட்டுப்போய் இருப்பது பற்றி வேலைக்காரி கூறியபிறகு பார்வதி அதை பார்த்து அதிர்ச்சி ஆகிறார்.

கெட்டுப்போன பால் அபசகுனம் என நினைக்கும் பார்வதி, ஏற்கனவே அகிலாவின் கால் தவறியதை பற்றியும் யோசித்து பார்க்கிறார்.

ஷாக்கான குடும்பத்தினர்

அகிலா வீட்டுக்கு சென்ற பிறகு இந்த வாய் பேச முடியாத நபரை மற்றவர்களுக்கு அறிமுகப்படுத்துகிறார் அகிலா. என்னை ஆபத்தில் இருந்து காப்பாற்றியது இவர் தான் என அகிலா சொல்ல, என்ன ஆபத்து என அனைவரும் கேட்கிறார்கள். போகும் வழியில் ஏதாவது விபத்து ஏற்பட்டு விட்டதா என ஆதி கேட்க, இல்லை.. இல்லை.. கோவிலில் தான் ஆபத்து, மரக்கிளை மேலே இருந்து விழ இருந்த நேரத்தில் இவர் வந்து காப்பாற்றி விட்டார் என ஐஸ்வர்யா சொல்கிறார்.

இப்படி ஒரு சம்பவம் நடந்தது பற்றி அறிந்து அனைவரும் ஷாக் ஆகிறார்கள்.

சமையல் வேலை தரும் பார்வதி

அகிலா பார்வதியை அழைத்து, அந்த வாய் பேச முடியாத நபருக்கு என்ன வேலை தெரியும் கேட்டுக் கொடு எனக் கூறி விட்டுப் போகிறார். பார்வதியும் அவரிடம் முதலில் என்ன பெயர் என கேட்க அதை சைகைகளிலேயே கூறுகிறார்.

அவரது பெயர் சிவா என தெரிந்து கொள்வதற்கு ஆதி மற்றும் பார்வதிக்கு ஐந்து நிமிடம் ஆகிறது. அதன்பின் தனக்கு சமையல் வேலை தெரியும் என அந்த நபர் கூறுகிறார் அதைக்கேட்டு பார்வதி அவரை சமையலறையில் ஏதாவது உதவிகள் செய் என சொல்லி அனுப்பி வைக்கிறார்.

அசிங்கப்படும் வனஜா

மறுபுறம் நந்தினி மற்றும் ராஜேஸ்வரியின் தம்பி ரத்னம் ஆகியோர் சந்தித்துப் பேசிக் கொள்கின்றனர். அகிலாவை ஏதாவது செய்தே ஆக வேண்டும் என இருவரும் தீவிரமாக ஆலோசிக்கிறார்கள்.

வனஜா அந்த வாய் பேச முடியாத நபரை அழைத்து தனக்கு ஒரு காபி வேண்டும் என்பதை சொல்ல முயற்சிக்கிறார். முதலில் அவருக்கு காது கேட்குமா என்பதை தெரிந்துகொள்ள சைகையிலேயே கேட்கிறார். சில நிமிடங்கள் கழித்துதான் அதற்கும் அவருக்கு பதில் கிடைக்கிறது. அதற்குப் பிறகு தனக்கு ஒரு காபி வேண்டும் என்பதை செய்கையில் சொல்லி புரிய வைக்க அவர் படாதபாடு படுகிறார்.

அதை பார்த்து உமா விழுந்து விழுந்து சிரிக்கிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி