ஆப்நகரம்

இளநீரில் சாராயம்.. அகிலாவிடம் வசமாக சிக்கும் கணவர்!

செம்பருத்தி சீரியலில் இன்று அகிலாவின் கணவர் சாராயம் கலந்த இளநீரை குடித்துவிட்டு உளறிக்கொண்டு இருப்பதை அவர் ஜன்னலில் இருந்து பார்த்துவிடுகிறார். என்ன செய்ய போகிறாரோ?

Samayam Tamil 26 Jan 2021, 11:12 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் பொங்கல் கொண்டாட்டம் களைகட்டி இருந்தது. அதில் வனஜா உரியடி பானையை உடைத்து அவர் மீது அரிப்பு செடி விழுந்து விடுகிறது. அவர் போட்ட சதித்திட்டம் அவருக்கு எதிராகவே வந்துவிட்டது.
Samayam Tamil Sembaruthi Serial


அதனை தொடர்ந்து செம்பருத்தி சீரியல் இன்றைய எபிசோடில் வில்லி ராஜேஸ்வரி தனது மகனுக்கு போன் செய்கிறார். வெளிநாட்டில் அவனை வீட்டிலேயே பூட்டி வைத்திருக்கும் அவர், மகனிடம் மிகவும் கோபமாக பேசுகிறார்.

"என்னை வேண்டுமானால் பூட்டி வைக்கலாம். ஆனால் எனது காதலை உங்களால் ஒன்றும் செய்ய முடியாது" என அவரது மகன் சொல்கிறார். இதனால் கடும் கோபமடைந்த அவர், 'நம் அந்தஸ்து மற்றும் கவுரவத்தை விட அந்த சமையல்காரி பேத்தி உனக்கு பெரிதாக போய் விட்டாளா என கத்துகிறார். தன் அந்தஸ்துக்கு தகுந்தாற் போல ஒரு பெண்ணை பார்த்து வைத்திருப்பதாகவும் அவருடன் தான் உனக்கு திருமணம் நடைபெற போகிறது என்றும் கூறி அதிர்ச்சி கொடுக்கிறார் ராஜேஸ்வரி.

ராஜேஸ்வரிக்கு ஆதரவாக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் காதலை நிச்சயம் சேர்த்து வைப்பேன் என பார்வதியும் வாக்கு கொடுத்திருக்கிறார்.

அதன்பின் கிராமத்து வீட்டில் இருக்கும்அருண் மற்றும் மாமா வடிவேலு இருவரும் சேர்ந்து இளநீரில் சாராயத்தை ஊற்றி அதை குடிப்பதற்காக தயார் செய்து வைத்திருக்கின்றனர். அந்த நேரத்தில் சரியாக அகிலாவின் கணவர் வந்து விடுகிறார்.

அவர்களுடன் ஏதோ பேசிக் கொண்டிருக்கும் போது அவர் இளநீரை எடுத்துக் குடிக்க ஆரம்பித்து விடுகிறார். அங்கு இருந்த ஆறு இளநீரையும் அவர் குடித்துவிட்டார். அவர் குடித்து விட்டு உளறிக்கொண்டு இருப்பதை வீட்டில் இருந்து ஜன்னல் வழியாக அகிலா பார்த்துவிடுகிறார். அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. அகிலா என்ன செய்யப்போகிறார் என்பது நாளைய எபிசோடில் தான் தெரிய வரும்.

அடுத்த செய்தி