ஆப்நகரம்

Sembaruthi அகிலா இப்படி பேசுவாங்கனு எதிர்பார்க்கவே இல்லை: ஷாக் ஆன குடும்பம்

செம்பருத்தி செரியலில் இன்று அகிலாண்டேஸ்வரி தனக்கு பார்வதி மீது சுத்தமாக நம்பிக்கை இல்லை என கூறியதால் அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.

Samayam Tamil 10 Feb 2021, 11:45 pm
செம்பருத்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் பார்வதி செய்த் கிரீம் ஸ்கின் சீட் டெஸ்டில் பாஸ் செய்துவிடுகிறது. அதன் பின் பார்வதி வீட்டிற்கு வந்த போது பவானி அங்கு வந்து நிற்கிறார். தான் காதலர் மஹேஷுக்கு நேரில் பிறந்தநாள் வாழ்த்து சொல்வதாக வாக்கு கொடுத்திருப்பதாகவும் அதற்கு உதவ வேண்டும் என்றும் கேட்கிறார். இரவு நேரத்தில் பவானியை தனியாக அனுப்பமுடியாது என்பதால் ஆதியின் மாமா சிங்காரவேலன் உடன் செல்கிறேன் என கூறுகிறார்.
Samayam Tamil Sembaruthi Serial


மறுபுறம் அருண் மற்றும் அவரது அப்பா இருவரும் வீட்டில் அமர்ந்து பேசி கொண்டிருக்கும் நேரத்தில் ப்ராஜெக்ட் கொடுத்திருக்கும் வெளிநாட்டு நிறுவனத்தின் உரிமையாளரிடம் இருந்து கால் வருகிறது. அவர் அகிலாவுடன் பேச வேண்டும் என சொன்னதால் அருண், அப்பா மற்றும் ஐஸ்வர்யா மூவரும் பயந்துகொண்டே அகிலாவிடம் கொண்டு சென்று போனை கொடுக்கின்றனர்.

இந்த ப்ராஜெக்ட் முடியும் நிலையில் இருப்பதாக அகிலாவும் அவருக்கு நம்பிக்கை கொடுத்து பேசுகிறார். அதனால் அவர்கள் மூவரும் மகிழ்ச்சி ஆகின்றனர். இதை கொண்டாடியே ஆகவேண்டும் என கூறுகிறார்கள். அகிலா இப்படி பார்வதி பற்றி நம்பிக்கையுடன் பேசுவார் என எதிர்பார்க்கவே இல்லை என சொல்கிறார்கள்.

அப்போது வெளியில் வரும் அகிலா, 'ரொம்ப சந்தோசப்படாதீங்க. உங்க நம்பிக்கை உடையக்கூடாது என்பதற்காக தான் இதை செய்தேன். இப்போதும் பார்வதி மீது எனக்கு சுத்தமாக நம்பிகை இல்லை" என கூற அவர்கள் அதிர்ச்சி ஆகின்றனர்.

அதன் பின் பார்வதி செய்த கிரீமை டெஸ்ட் நாளை நடைபெற உள்ள நிலையில், அந்த கிரீமை வில்லி வனஜா வீட்டிற்கு திருடிக்கொண்டு வந்துவிடுகிறார். அதை நாம் முகத்தில் போட்டு டெஸ்ட் செய்யலாம் என வில்லிகள் இருவரும் பேசுவதை மறைந்திருந்து கேட்ட வடிவேல் அந்த கிரீமில் ப்ளீச்சிங் பவுடரை கலந்துவிடுகிறார்.

அதை அவர்கள் முகத்தி தடவியதும் எரிகிறது என கத்துகிறார்கள். இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.

அடுத்த செய்தி