ஆப்நகரம்

Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி! இப்படி மாறிட்டாரே?

செம்பருத்தி சீரியலில் இன்று அகிலாண்டேஸ்வரி ஆதி மீது அன்பை பொழிந்திருக்கிறார்.

Samayam Tamil 1 Mar 2021, 12:08 am
செம்பருத்தி சீரியலில் ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்த திருப்பம் சென்ற வாரம் நடந்தது. அகிலாண்டேஸ்வரி ஆதி மற்றும் பார்வதியை மீண்டும் வீட்டுக்கு வர வைத்திருக்கிறார்.
Samayam Tamil sembaruthi serial today akhilandeswari cooks for aadhi
Sembaruthi Serial: அன்பை பொழியும் அகிலாண்டேஸ்வரி! இப்படி மாறிட்டாரே?


நேற்றைய எபிசோடு

செம்பருத்தி சீரியல் நேற்றய எபிசோடில் ஆதி - பார்வதி ஆகியோர் தூங்கப்போகும் அறையை அகிலாவே தன் கையால் சுத்தம் செய்து அனைத்தையும் தயார் செய்தார் என்பதை கேட்டு அனைவரும் ஆச்சர்யம் அடைகின்றனர்.

அம்மாவை தனியாக சந்தித்து பேசி மனதில் இருக்கும் ஏக்கத்தை எல்லாம் கொட்டி தீர்க்க வேண்டும் என எண்ணி அவரை பார்க்க போகிறார் ஆதி. ஆனால் பேச முடியாமல் திரும்பி வந்து விடுகிறார்.

தூக்கம் இல்லாமல் தவிக்கும் ஆதி

அதன் பின் தூக்கம் இல்லாமல் தவிக்கிறார் ஆதி. அதிக நேரம் பொறுத்து பொறுத்து பார்த்துவிட்டு அம்மாவை நான் பார்த்துவிட்டு வருகிறேன் என பார்வதியிடம் சொல்லிவிட்டு கிளம்புகிறார். ஆனால் அறையில் அவர் இல்லை.
வெளியில் பார்க்கும் போது அவர் கீழே சோபாவில் அமர்ந்து தூங்கிக்கொண்டு இருப்பதை ஆதி பார்க்கிறார். அங்கு சென்று பார்க்கும் போது அவரும் தூங்காமல் அமர்ந்துகொண்டு இருப்பது தெரிகிறது.

அன்பை பொழியும் அகிலா

தன் மகன் மீது இருக்கும் அன்பை அகிலா பல நாட்களுக்கு பிறகு காட்டுகிறார். அவரை தன் மடியில் படுக்க வைத்து அன்பு மழை பொழிகிறார்.

யார் முதலில் பேசுவது என்றே அவர்களுக்கு நடுவில் ஒரு தடுமாற்றம் ஏற்படுகிறது. ‘நான் உங்கள் மடியில் தலை வைத்து படுத்துக்கொள்ளவா, ரொம்ப நாள் ஆச்சி மா..’ என ஆதி கேட்டதால் அகிலா அவரை தன் மடியில் படுக்கவைத்துக்கொள்கிறார்.

ஆதிக்காக சமைக்கும் அகிலா

தனக்கு பசிக்கிறது என ஆதி சொல்ல உடனே அகிலா அவரை கிட்சனுக்கு அழைத்து சென்று அவருக்காக தோசை சுட ஆரம்பிக்கிறார். அவரே தன் கையால் ஊட்டியும் விடுகிறார். ஆதியும் அகிலாவுக்கு ஊட்டி விடுகிறார்.

இதையெல்லாம் பார்வதி மாடியில் இருந்து பார்த்து நெகிழ்ச்சி ஆகிறார். மேலும் ஆதியின் அப்பாவும் அந்த நேரத்தில் அறையில் இருந்து வெளியில் வருகிறார். அகிலா - ஆதி ஒன்றாக பேசுக்கொண்டிருப்பதை பார்த்து அவரும் மகிழச்சி அடைகிறார்.

இனி என்ன நடக்கும் என்பது நாளைய எபிசோடில் தெரியும்.

அடுத்த செய்தி