ஆப்நகரம்

Sembaruthi பார்வதி பற்றி அகிலா சொன்ன விஷயம்.. கேட்டு கண்ணீர் விட்ட பார்வதி

செம்பருத்தி சீரியலில் இன்று பார்வதி பற்றி அகிலா சொன்ன விஷயத்தை கேட்டு அனைவரும் ஷாக் ஆகின்றனர்.

Samayam Tamil 15 Sep 2021, 6:32 am
எப்போதும் பார்வதி மருமகள் ஆக முடியாது என அகிலா சொல்கிறார். அதை கேட்டு பார்வதி மற்றும் ஆதி ஆகியோர் கடும் அதிர்ச்சி அடைகின்றனர்.
Samayam Tamil sembaruthi serial today akhilas words makes parvathy cry
Sembaruthi பார்வதி பற்றி அகிலா சொன்ன விஷயம்.. கேட்டு கண்ணீர் விட்ட பார்வதி


அகிலாவிடம் கணவர் கேட்ட கேள்வி

ஜெயிலில் இருந்து வந்த பிறகு பார்வதியை அருகில் அமர வைத்து அன்பாக பேசிய நீ, மறுநாள் கோவிலில் ஏன் அப்படி நடந்துகொண்டாய் என கணவர் கேட்கிறார். அவளுக்கு கொடுக்க வேண்டிய கௌரவத்தை தான் கொடுத்திருக்கிறேன் என அதற்கு பதில் கூறுகிறார் அகிலா.

பார்வதியை மருமகளாக நீ ஏற்றுக்கொள்ள போகிறாய் என்று தான் நாங்கள் நினைத்தோம், ஆனால் இப்படி செய்துவிட்டாய் என கணவர் கேட்க, நீங்களாக நினைத்துக்கொண்டால் அதற்கு நான் பொறுப்பல்ல என சொல்கிறார்.

எப்போதும் மருமகள் ஆக முடியாது

உன் மனதில் எப்போதும் பார்வதிக்கு இடம் இல்லையா என கேட்க, 'என் மனதில் எப்போதம் பார்வதிக்கு இடம் உண்டு, நான் உயிரைவிடும் நேரத்தில் கூட முதலில் உங்கள் முகம் நினைவுக்கு வரும், அதன் பின் ஆதி, அருண் நினைவு வரும். அவர்கள் இல்லாமல் வேறு ஒருவர் நினைவுக்கு வருவார் என்றால் அது பார்வதி தான்' என கூறுகிறார் அகிலா.

பார்வதி என்ற பெண்ணுக்கு என் மனதில் எப்போதும் இடம் உண்டு, ஆனால் மருமகளாக எப்போதும் ஆக முடியாது என கோபமாக சொல்லிவிட்டு போகிறார்.

அடுத்த செய்தி