ஆப்நகரம்

Sembaruthi அகிலா நடத்தும் திருமணத்தை நிறுத்த கிளம்பிய ஆதி, பார்வதி! வெடிக்க போகும் பிரச்சனை

செம்பருத்தி சீரியலில் இன்று அகிலா தனது தோழி ராஜேஸ்வரியின் மகன் நிச்சயதார்த்தத்திற்கு செல்கிறார். மறுபுறம் ஆதி மற்றும் பார்வதி அதை நிறுத்த முயற்சிக்கின்றனர்.

Samayam Tamil 19 Apr 2021, 8:26 pm
செம்பருத்தி சீரியலில் நேற்றைய எபிசோடில் அதை மட்டும் பார்வதி இருவரும் மாறுவேடத்தில் மகேஷ் இருக்கும் வீட்டுக்குள் சென்று வருகின்றனர். ஆனால் அவரிடம் எதுவும் பேச முடியவில்லை. அதனால் ஏமாற்றத்துடன் வெளியில் வருகின்றனர். அதற்குப் பிறகு இன்றைய எபிசோடில் இன்று என்ன நடந்தது என பார்க்கலாம்.
Samayam Tamil sembaruthi serial today update aadhi has a plan to stop maheshs engagement
Sembaruthi அகிலா நடத்தும் திருமணத்தை நிறுத்த கிளம்பிய ஆதி, பார்வதி! வெடிக்க போகும் பிரச்சனை



நிச்சயதார்த்த ஏற்பாடு

வில்லி ராஜேஸ்வரி வீட்டில் நிச்சயதார்த்தத்திற்கான ஏற்பாடுகள் மிக வேகமாக நடந்து கொண்டிருக்கிறது. மறுபுறம் அகிலா வீட்டில் கணவர் மற்றும் அருண், ஐஸ்வர்யா ஆகியோரை அழைத்துக் கொண்டு கிளம்ப தயாராகிறார். ஆனால் வனஜா எங்கே எனத் தேடும்போது அவர் தனக்கு உடல்நிலை சரியில்லை என சொல்லி அங்கேயே இருந்து விடுகிறார். இந்த நேரம் பார்த்தா தனக்கு குளிர் ஜுரம் வர வேண்டும் என அதிகம் வருத்தப்படுகிறார் வனஜா.

புறப்படும் ஆதி பார்வதி

அதன் பின் வனஜா அதிக வருத்தத்துடன் வீட்டில் அமர்ந்து கொண்டு இருக்க, அப்போது ஆதி மற்றும் பார்வதி இருவரும் அறையிலிருந்து வெளியில் கிளம்புகிறார்கள். அகிலா நடத்திவைக்க சென்றிருக்கும் திருமணத்தின் நிச்சயதார்த்தத்தை நிறுத்துவதற்காக தான் ஆதி மற்றும் பார்வதி செல்கிறார்கள் என்பதை நினைத்து மகிழ்ச்சி கொள்கிறார். ஆனால் அதை பார்க்க முடியவில்லை என்றும் ஒருபுறம் வருத்தப்படுகிறார்.

போன் செய்யும் மகேஷ்

அந்த நிச்சயதார்த்தத்தை எப்படியாவது நிறுத்துங்கள் என ஆதிக்கு போன் செய்கிறார் மாப்பிள்ளை மகேஷ். அருகில் ரௌடிகள் இருந்தாலும் அவர்களை ஏமாற்றிவிட்டு பாத்ரூமுக்குள் சென்று அவர் ஆதிக்கு போன் செய்கிறார். அப்போது ஆதி ஒரு விஷயத்தை அவரிடம் சொல்கிறார். நாங்கள் இப்போது வந்து கொண்டிருக்கிறோம், நான் சொல்வது போல் நீ செய் என கூறிவிட்டு அழைப்பை துண்டிக்கிறார்.

தொடங்கும் நிச்சயதார்த்தம்

மணப்பெண்ணும் அவரது குடும்பத்தினரும் வந்து ஏற்கனவே காத்துக்கொண்டிருக்கிறார்கள். அகிலா சற்று தாமதமாக வந்து சேர்கிறார். நிச்சயதார்த்தத்தை தொடங்கி விடலாமா என அவர் கேட்க, தொடங்கலாம் என சொல்லி மாப்பிள்ளையை அழைத்து வரச் சொல்கிறார்கள். அகிலாண்டேஸ்வரி மாடிக்கு சென்று மாப்பிள்ளையை அழைத்து வருகிறார். இதை எப்படி நிறுத்துவது என குழப்பமாக யோசித்துக் கொண்டு தான் இருக்கிறார் மகேஷ். ஆதி சொன்னது போல செய்து விடலாம் என்ற முடிவில் இருக்கிறார் அவர். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவடைகிறது. இனி என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்கலாம்.

அடுத்த செய்தி