ஆப்நகரம்

பார்வதி காலில் விழும் பவானி.. பார்த்து ஷாக் ஆன அகிலா! பார்வதிக்கு சிக்கல் மேல் சிக்கல்

செம்பருத்தி சீரியலில் இன்று பார்வதி ரகசியமாக சென்று பவானியை பார்க்கிறார். இது பற்றி வனஜா அகிலாவிடம் போட்டு கொடுக்கிறார். அதனால் இனி பார்வதிக்கு மேலும் சிக்கல் தான்.

Samayam Tamil 28 Apr 2021, 2:48 am
பார்வதி எது செய்தாலும் சிக்கலாகவே மாறிவிடுகிறது என சொல்லும் அளவுக்கு அவருக்கு சிக்கல் மேல் சிக்கலாக வருகிறது.
Samayam Tamil sembaruthi serial today update parvathy talks with bhavani akhila shocked on seeing it
பார்வதி காலில் விழும் பவானி.. பார்த்து ஷாக் ஆன அகிலா! பார்வதிக்கு சிக்கல் மேல் சிக்கல்


திட்டும் ஆதி

பார்வதி அம்மாவாசை அன்று மட்டன் பிரியாணி செய்துவிட்டார் என சொல்லி அகிலா திட்டுகிறார். கங்கா வேண்டுமென்றே பார்வதியை இப்படி மாட்ட வைத்துவிடுகிறார். அதன் பின் அறையில் ஆதி பார்வதியை திட்டுகிறார்.

நீயே ஏன் உன்னை கஷ்டப்படுத்திக்கிற. கங்கா சொன்னதால் தான் செய்தேன் என சொல்ல வேண்டியது தானே என திட்டுகிறார் ஆதி.

பவானியை சந்திக்கும் பார்வதி

அதன் பின் பார்வதி பதுங்கி பதுங்கி வீட்டுக்கு வெளியில் செல்கிறார். அங்கு அவர் பட்டம்மாவின் பேத்தி பவானியை சந்தித்து பேசுகிறார். சொன்னது போல எனக்கும் மஹேஷுக்கும் கல்யாணம் செய்து வையுங்கள் என அவர் அழுகிறார். அவருக்கு என்ன பதில் சொல்வது என தெரியாமல் அவருக்கு ஆறுதல் கூறி கொண்டிருக்கிறார் பார்வதி.

பார்த்து அதிர்ச்சி ஆகும் அகிலா

வனஜா இதை பார்த்துவிட்டு நேராக அகிலாவிடம் சொல்கிறார். வீட்டில் இருக்கும் அனைவரையும் அழைத்து கொண்டு வெளியில் தோட்டத்திற்கு வருகிறார். மகேஷ் திருமண நிச்சயதார்த்ததை நிறுத்த காரணமான பவானியிடம் பேசிக்கொண்டிருக்கிறார் என அறிந்து அதிர்ச்சி அடைகிறார்.

அதன் பின் அருகில் சென்று பார்வதி பேசுவதை கேட்கும் போது தான் அகிலாவுக்கு பார்வதி பற்றி தெரிகிறது. எனக்கு அம்மா தான் முக்கியம். அவர் வாள் மீது செய்த சத்தியம் தான் முக்கியம் என சொல்லி கொண்டிருக்கிறார். அப்போது பவானி திடீரென பார்வதி காலில் விழுந்துவிடுகிறார்.

பவானியை வீட்டை விட்டு இப்போது அனுப்பி ஆகவேண்டும் என யோசிக்கும் பார்வதி 'என்னால் முடித்ததை செய்கிறேன். இப்போது போ' என சொல்லி அனுப்புகிறார். அதை கேட்டு அகிலா அதிர்ச்சி அடைகிறார். பார்வதியை கோபத்துடன் அழைக்கிறார். இத்துடன் எபிசோடு நிறைவுக்கு வந்தது.

அடுத்த செய்தி