ஆப்நகரம்

Sembaruthi Serial: மாறுவேடத்தில் சென்று மகேஷை பார்க்கும் ஆதி, பார்வதி

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி மற்றும் பார்வதி இருவரும் மாறுவேடத்தில் மகேஷ் வீட்டுக்குள் சென்று வருகின்றனர்.

Samayam Tamil 18 Apr 2021, 2:01 am
மஹேஷை வில்லி ராஜேஸ்வரி ஹவுஸ் அரெஸ்டில் வைத்திருக்கும் நிலையில் ஆதி மற்றும் பார்வதி இருவரும் மாறுவேடத்தில் சென்று அவரை பார்த்துவிட்டு வருகின்றனர்.
Samayam Tamil sembaruthi serial update aadhi and parvthy meets mahesh in a new getup
Sembaruthi Serial: மாறுவேடத்தில் சென்று மகேஷை பார்க்கும் ஆதி, பார்வதி


மாறுவேடத்தில் செல்லும் ஆதி பார்வதி

மஹேஷுக்கு நிச்சயதார்த்தம் மட்டும் நடந்து முடிந்துவிட்டால் தான் நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டேன் என சொல்கிறார் பவானி. அதனால் அவருக்காக எதாவது செய்தாக வேண்டும் என ஆதி மற்றும் பார்வதி முடிவெடுக்கின்றனர்.

அதற்காக மாறுவேடத்தில் சென்று மகேஷின் வீட்டுக்குள் நுழைகின்றனர். ஊர் நாட்டாமை போல பேசி அவரகள் உள்ளே நுழைகின்றனர். வில்லி ராஜேஸ்வரியின் தம்பியால் கூட கண்டுபிடிக்க முடியவில்லையாம்.

இது மாறுவேடம் என சொன்னால் குழந்தை கூட நம்பாது. அப்படி உடையை மட்டும் மாற்றிவிட்டு மாறுவேடம் என சொல்லி அட்ராசிட்டி செய்திருக்கிறார் செம்பருத்தி சீரியல் இயக்குனர். மகத்தில் மரு வைத்திருந்தாலாவது அந்த கால சினிமா போல என நினைத்து மனதை தேற்றிக்கொண்டிருக்கலாம்.

மஹேஷிடம் பேச முடியவில்லையே

ராஜேஸ்வரியின் தம்பியையும் ஏமாற்றி அவர்கள் மகேஷ் இருக்கும் அறைக்குள் செல்கின்றனர். மாப்பிள்ளைக்கு வெட்டி தரவேண்டும் என சொல்லி தான் அவர்கள் செல்கின்றனர். ஆனால் அவர்களால் மஹேஷிடம் பேச முடிவதில்லை.

வேட்டியை மட்டும் கொடுத்துவிட்டு வெளியில் வருகின்றனர். ராஜேஸ்வரியின் தம்பி அவர்களை அவசர அவசரமாக வெளியில் அனுப்பி விடுகிறார். உள்ளே சென்றும் பேச முடியாமல் போய்விட்டதே என ஆதி - பார்வதி ஏமாற்றத்துடன் திரும்புகின்றனர்.

வருத்தப்படும் அருண்

அதன் பின் வீட்டில் அருண் மனைவி ஐஸ்வர்யாவிடம் ஒரு விஷயத்தை கூறி வருத்தப்படுகிறார். நம்மை மட்டும் அம்மா நிச்சயதார்த்தத்திற்கு செல்ல ரெடி ஆக சொல்லி இருக்கிறார். ஆனால் ஆதி - பார்வதியை சொல்லவில்லை என வருத்தப்படுகிறார்.

பார்வதி ரெஸ்ட் எடுக்கவேண்டும் என்பதற்காக தான் அப்படி சொல்லி இருப்பார் என கூறி ஐஸ்வர்யா சமாதானப்படுத்துகிறார். இத்துடன் இன்றய எபிசோடு நிறைவுபெற்றது.

அடுத்த செய்தி