ஆப்நகரம்

சத்தியம் கேட்கும் அகிலா.. ஆதி என்ன செய்தார் தெரியுமா? செம்பருத்தி சீரியல் அப்டேட்

மகேஷ் திருமணத்தில் இனி எந்த பிரச்னையும் செய்ய மாட்டோம் என சத்தியம் செய்து கொடுக்கும்படி அகிலா கேட்கிறார். ஆனால் ஆதி என்ன செய்தார் தெரியுமா?

Samayam Tamil 21 Apr 2021, 9:51 pm
செம்பருத்தி சீரியல் நேற்றய எபிசோடில் மகேஷ் நிச்சயதார்த்தத்தை ஆதி மற்றும் பார்வதி நிறுத்திவிட்டார்கள் என அறிந்து அகிலா அதிர்ச்சி ஆகிறார். அங்கு அவர்களிடம் ஒரு வார்த்தை கூட பேசாமல் கிளம்பிவிடுகிறார்.
Samayam Tamil sembaruthi serial update akhila asks aadhi a promise
சத்தியம் கேட்கும் அகிலா.. ஆதி என்ன செய்தார் தெரியுமா? செம்பருத்தி சீரியல் அப்டேட்



புலம்பும் வனஜா

மறுபுறம் வீட்டில் இருக்கும் வனஜா அங்கு என்ன நடந்தது என தெரியவில்லையே என பதற்றத்துடன் இருக்கிறார்கள். அகிலா - பார்வதி சண்டை நடந்து இருக்குமா, இருவரும் பார்த்து இருப்பார்களா என யோசித்து கொண்டே இருக்கிறார்.

அந்த நேரத்தில அகிலாண்டேஸ்வரி கோபத்துடன் வீட்டுக்குள் வருகிறார். மற்றவர்களும் பின்னர் வளர்கின்றனர். ஐஸ்வர்யாவிடம் என்ன நடந்தது என ரகசியமாக கேட்கிறார் வனஜா. ஆதி பாரதி நிச்சயதார்த்தத்தை நிறுத்திவிட்டார்கள் என ஐஸ்வர்யா சொல்ல வனஜாவுக்கு ஒரே சந்தோசம்.

இன்று ஒரு பிரச்சனை நடக்கப்போகிறது என அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார்.

ஆதியிடம் சத்தியம் கேட்கும் அகிலா

அதன் பின் ஆதியும் பார்வதியும் வந்து சேர்கிறார்கள். வந்த உடன் ஆதியை அழைத்து ஒரே ஒரு கேள்வியை கேட்கிறார். 'மகேஷ் திருமணத்தை நான் நடத்தி வைப்பதாக பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து கொடுத்தது பற்றி தெரியுமா தெரியாதா?' என கேட்கிறார்.

எனக்கு தெரியாது, நீங்கள் சொல்லி தான் தெரியும் என சொல்கிறார். அதன் பின் தனக்கு ஒரு வாக்கு கொடுக்கும்படி கேட்கிறார் அவர். 'இப்போது தெரிந்துவிட்டது தானே. இனி எங்களால் எந்த பிரச்சனையும் மகேஷ் திருமணத்தில் வராது' என வாக்கு கொடு என கேட்கிறார். ஆனால் ஆதி அமைதியாகவே இருக்கிறார்.

பட்டம்மாவை அழைத்து திட்டும் அகிலா

மகேஷ் காதலிக்கும் பவானி பட்டம்மாவின் பேத்தி தான் என சொல்கிறார் வனஜா. உடனே அகிலா கோபமாக பட்டம்மாவை அழைக்கிறார். மகேஷ் திருமணத்தில் பவானியால் பிரச்சனை வரக்கூடாது. நீ தான் பேச வேண்டும் என சொல்கிறார்.

"உங்கள் சத்தியம் தான் முக்கியம், நான் பவானியிடம் பேசுகிறேன். திருமணம் முடியும் வரை நான் வேலைக்கு வரவில்லை" என கூறிவிட்டு கிளம்புகிறார்.

வேலைக்காரிக்கு உங்கள் மீது இருக்கும் அக்கறை கூட உங்கள் மகன் ஆதிக்கு உங்கள் மீது இல்லை என வில்லை வனஜா ஏத்தி விடுகிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி