ஆப்நகரம்

Sembaruthi Serial: ஆதி பார்வதி பற்றி புது சிக்கலை கிளப்பிய வில்லி வனஜா! ஆனால் இறுதியில் ஒரு ட்விஸ்ட்

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி மற்றும் பார்வதியை வம்பில் மாட்ட வைக்க வில்லி வனஜா முயற்சி செய்கிறார். ஆனால் இறுதியில் நடந்தது இது தான்.

Samayam Tamil 2 Mar 2021, 12:59 am
செம்பருத்தி சீரியலில் ஆதி மற்றும் பார்வதி மீண்டும் அகிலாவின் அனுமதியுடன் வீட்டுக்கு வந்திருக்கின்றனர்.
Samayam Tamil sembaruthi serial update akhila happy on talking to aadhi
Sembaruthi Serial: ஆதி பார்வதி பற்றி புது சிக்கலை கிளப்பிய வில்லி வனஜா! ஆனால் இறுதியில் ஒரு ட்விஸ்ட்


பாசத்தை பொழியும் அகிலா

செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் ஆதிக்கு பார்வதி தோசை செய்து கொடுத்து தனது பாசத்தை வெளிப்படுத்துகிறார். நாம் இப்படி சாப்பிட்டு எத்தனை நாள் ஆகிறது என கூறி கண்ணீர் விடுகிறார் அவர்.

அதன் பின் தன் மனதே நிறைந்துவிட்டது என கூறும் அகிலா மகனிடம் அன்பை பொழிந்துவிட்டு தூங்க செல்கிறார். தூக்கம் இல்லாமல் தவித்த ஆதியும் மனநிறைவோடு தூங்க செல்கிறார்.

நெகிழ்ச்சியான அகிலா

அதன் பின் அறைக்கு செல்லும் அகிலாவிடம் அவரது கணவர் பேசுகிறார். இத்தனை காலத்திற்கு பிறகு அகிலா மகிழ்ச்சியாக இருந்ததை தான் பார்த்ததாக அவர் கூறுகிறார். இதை பார்ப்பதற்காக தான் தூங்காமல் இருந்ததாகவும் கூறுகிறார் அவர்.

ஆதி தன்னை தேடி வந்துவிட்டதாகவும், இந்த தருணம் அப்படியே நிலைக்காதா என தான் ஏங்குவதாக அகிலா கூறுகிறார்.

நீங்களும் வந்திருக்கலாமே என அகிலா சொல்ல, 'ஆதி உன்னிடம் பேசி ரொம்ப நாள் ஆகிவிட்டது. அவன் என்னிடம் எப்போது வேண்டுமானாலும் பேசுவான்' என கணவர் கூறுகிறார். இப்போது உன் மனது லேசாக இருக்கும், நிம்மதியாக தூங்கு என்றும் கூறுகிறார்.

வீட்டுக்குள் வர மறுக்கும் பார்வதி

ஆதி அவரது அம்மாவிடம் பேசிக்கொண்டிருந்ததை பார்த்துக்கொண்டிருந்த பார்வதி, அவுட் ஹவுஸிற்கு சென்றுவிடுகிறார். அம்மா மகன் பாசத்திற்கு இடையே தான் இருப்பதாக எண்ணி அவர் வருந்துகிறார். ஆதி வீட்டிற்கு அழைத்தும் அவர் வர மறுக்கிறார். ஆதியை மட்டும் அங்கு வீட்டுக்கு சென்று தூங்க சொல்கிறார்.

உங்களுக்காக அம்மா அறையை சுத்தம் செய்து இருக்கிறார். அங்கு வந்து நான் இருந்தால் நன்றாக இருக்காது என காரணம் சொல்கிறார் பார்வதி. இதை ஏற்றுக்கொள்ளாத ஆதி தானும் அங்கு செல்ல மாட்டேன் என சொல்கிறார். நீ இருக்கும் இடத்தில் தான் நானும் இருப்பேன் என சொல்கிறார்.

பிரச்னையை கிளப்பும் வனஜா, ஆனாலும் ஒரு ட்விஸ்ட்

இதை எல்லாம் ஓட்டு கேட்டுக்கொண்டிருந்த வில்லி வனஜா நேராக சென்று அகிலாவிடம் போட்டு கொடுக்கிறார். 'நீங்கள் சுத்தம் செய்து வைத்த அறையில் தாங்காமல், ஆதியை வெளியில் கூட்டி சென்றுவிட்டார் பார்வதி, நீங்களே வந்து பாருங்கள்' என சொல்கிறார்.

அதை கேட்டு அகிலா அங்கு ஆதியின் அறைக்கு வந்து பார்க்கிறார். அப்போது ஆதி மற்றும் பார்வதி இருவரும் உள்ளே இருந்து வெளியில் வருகின்றனர்.

இப்படி ஒரு ட்விஸ்டை வில்லி எதிர்பார்க்கவில்லை. அகிலா கோபத்துடன் அவரை முறைக்கிறார். இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்போம்.

அடுத்த செய்தி