ஆப்நகரம்

வாள் மீது சத்தியம் செய்யும் அகிலா! ஆதி உடன் சிக்கல் வருமா? செம்பருத்தி சீரியலில் இன்று

செம்பருத்தி சீரியலில் இன்று அகிலா தன் பரம்பரை வாள் மீது சத்தியம் செய்து கொடுக்கிறார்.

Samayam Tamil 10 Apr 2021, 11:27 pm
நந்தினி சொன்ன பிளான் படி அகிலாவின் வீட்டுக்கு வரும் ராஜேஸ்வரி அவரிடம் ஒரு சத்தியம் வேண்டும் என கேட்கிறார்.
Samayam Tamil sembaruthi serial update akhila promises to rajeswari aadhi and parvathy promise bhavani
வாள் மீது சத்தியம் செய்யும் அகிலா! ஆதி உடன் சிக்கல் வருமா? செம்பருத்தி சீரியலில் இன்று


வாள் மீது சத்தியம்

இந்த திருமணத்தை நடத்தி வைப்பேன் என அகிலாண்டேஸ்வரி தனது ஆதிக்கடவூர் பரம்பரையின் வாள் மீது சத்தியம் செய்து கொடுக்கும்படி கேட்கிறார். ஆனால் அப்படி செய்யாதே குடும்பத்திற்கே ஆபத்தாகும் என கணவர் எச்சரிக்கிறார்.

ஆனால் அகிலா அதையும் தாண்டி வாளை கீழே எடுத்துவந்து ராஜேஸ்வரிக்கு சத்தியம் செய்து கொடுக்கிறார்.

பார்வதி செய்யும் சத்தியம்

மறுபுறம் பார்வதி கோவிலில் பாவானியிடம் பேசிக்கொண்டு இருக்கிறார். அவர் தன் பங்கிற்கு பாவானியிடம் கேட்காமலேயே ஒரு சத்தியத்தை செய்து கொடுக்கிறார். பவானிக்கு மகேஷ் உடன் திருமணம் நடைபெறும் என அவர் சாமி முன்பு சத்தியம் செய்து வாக்கு கொடுக்கிறார். ஆதியும் சத்தியம் செய்கிறார்.

அதனால் வரும் எபிசோடுகளில் ஆதி - அகிலா இடையே இதற்காகவே விரிசல் ஏற்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஆதியுடன் சாப்பிடும் சுந்தரம் - பிரச்சனை வருமா?

அதன் பின் அகிலா மீட்டிங் போக தாமதம் ஆவது பற்றி விசாரிக்க வீட்டுக்குள் வருகிறார் பார்வதியின் அப்பாவான டிரைவர் சுந்தரம். அகிலா வர லேட் ஆகும் என தெரிந்தபிறகு ஆதி சாப்பிட வருகிறார். அவர் சுந்தரத்தை தன் உடன் சாப்பிட வரும்படி அழைக்கிறார்.

முதலில் அவர் தயங்குகிறார். ஆதி, பார்வதி இருவரும் அதிகம் வற்புறுத்தியதால் அவர் டைனிங் டேபிளில் உட்காருகிறார். அந்த நேரம் பார்த்து வில்லி வனஜா வருகிறார். அகிலாவும் அவரது அறையில் இருந்து வேகமாக கீழே இறங்கி வருகிறார்.

அகிலா என்ன சொல்ல போகிறாரோ? நாளை தான் தெரியும்.

அடுத்த செய்தி