ஆப்நகரம்

ஆதி சொன்ன ஒரே வார்த்தை.. மனமுடைந்த அகிலா! செம்பருத்தி சீரியலில் இன்று

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி வீட்டை விட்டு செல்வதாகக் கூறியதால் அகிலா அப்செட் ஆகி விடுகிறார்.

Samayam Tamil 24 Mar 2021, 11:35 pm
செம்பருத்தி சீரியல் கடந்த இரு தினங்களாக ஒளிபரப்பாகாமல் இருந்தது. அதற்கு காரணம் தேவயானியின் புதுப் புது அர்த்தங்கள் சீரியல் இரண்டு நாட்களாக ஒரு மணி நேர ஷோவாக ஒளிபரப்பப்பட்டது தான். இந்நிலையில் இன்று முதல் வழக்கம் போல இரவு 9 மணிக்கு ஒளிபரப்பானது செம்பருத்தி.
Samayam Tamil sembaruthi serial update akhila upset after aadhi says he is leaving home
ஆதி சொன்ன ஒரே வார்த்தை.. மனமுடைந்த அகிலா! செம்பருத்தி சீரியலில் இன்று



கிளம்ப முடிவெடுத்த ஆதி

பார்வதியை வனஜா வம்புக்கு இழுத்தார் என்பது பற்றி அறிந்து கோபம் கொள்ளும் ஆதி, இனியும் பார்வதி இது போன்ற அவமானத்தை பட கூடாது என கூறுகிறார். அதனால் இன்றே கிளம்ப போவதாகவும் தன் முடிவை கூறுகிறார். இதனால் ஐஸ்வர்யா உள்ளிட்டவர்கள் அதிர்ச்சி அடைகிறார்கள்.

இனி என்ன சொல்லி ஆதியை சமாதானம் செய்ய முடியும் என அதிருப்தியுடன் பேசுகின்றனர்.

பார்வதி சமையலை பாராட்டும் அகிலா

பார்வதி இன்று அகிலாவுக்காக பார்த்து பார்த்து சமைத்த உணவை அனைவரும் சாப்பிடுகின்றனர். அனைவரும் ஆஹா ஓஹோ என பாராட்டிக்கொண்டிருக்க வனஜா மட்டும் வம்பாக பேசி கொண்டிருந்தார். அப்போது குறுக்கிட்ட அகிலா, சமையல் இன்று சூப்பராக இருக்கிறது என கூறி பார்வதியை பாராட்டுகிறார்.

இதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார் பார்வதி, ஆனால் வனஜாவுக்கு வழக்கம் போல வயிற்றெரிச்சல் தான்.

ஆதி சொன்ன வார்த்தை.. வருத்தமாக கிளம்பிய அகிலா

அதன் பின் ஆதிக்கு ஜானகி போன் செய்கிறார். அவர்கள் எப்போது திரும்பி வர போகிறீர்கள் என கேட்கிறார் அவர். அதற்கு அவர் இன்று நிச்சயம் வந்துவிடுவோம் என கூறுகிறார்.

இதை கேட்டு அதிர்ச்சியான அகிலா எதுவும் பேசாமல் கையை கழுவிவிட்டு அங்கிருந்து கிளம்பி செல்கிறார். அவரை தொடர்ந்து மற்றவர்களும் எழுந்து செல்கிறார்கள்.

பார்வதி போட்ட திட்டம்

அதன் பின் பார்வதி மிக வேகமாக வெளியில் சென்று போனை எடுத்து அகிலாவின் நிறுவனத்தில் பணியாற்றும் கஜேந்திரனை மருத்துவமனைக்கு வர சொல்கிறார். அதன் பின் மருத்துவமனைக்கு போன் செய்து 'பார்வதி என்ற பெண் கால் அடிபட்டு வருவார்' என சொல்கிறார்.

இதை எல்லாம் வில்லி வனஜாவும், உமாவும் ஒட்டு கேட்டு விடுகிறார்கள். அதன் பின் ஆதியிடம் செல்லும் பார்வதி தான் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு செல்கிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. இனி என்ன நடக்கும் என நாளை பார்க்கலாம்.

அடுத்த செய்தி