ஆப்நகரம்

மகனை பூட்டிவைத்துவிட்டு அகிலாவிடம் நாடகம் போடும் ராஜேஸ்வரி! செம்பருத்தி சீரியலில் இன்று

செம்பருத்தி சீரியலில் இன்று ராஜேஸ்வரி தனது மகன் மகேஷை அறையில் பூட்டி வைத்துவிட்டு அகிலாவிடம் நாடகம் ஆடுகிறார்

Samayam Tamil 16 Apr 2021, 6:27 am
செம்பருத்தி சீரியலின் நேற்றய எபிசோடில் அகிலா மற்றும் ஆதி இருவரும் போலீஸ் ஸ்டேஷன் சென்று பார்வதியை காப்பாற்றுகின்றனர். மேலும் பெண்களை தவறாக புகைப்படம் எடுத்து வைத்திருக்கும் நபர்களை போலீசில் சிக்க வைக்கின்றனர்.
Samayam Tamil sembaruthi serial update rajeswari plays double game with akhila
மகனை பூட்டிவைத்துவிட்டு அகிலாவிடம் நாடகம் போடும் ராஜேஸ்வரி! செம்பருத்தி சீரியலில் இன்று



மகனை பூட்டி வைக்கும் வில்லி ராஜேஸ்வரி

ராஜேஸ்வரி மகன் மகேஷின் திருமணத்தை நடத்தி வைப்பதாக அகிலா சத்தியம் செய்து கொடுத்திருக்கும் நிலையில், மகேஷ் தான் காதலிக்கும் பெண் பவானி உடன் ரெஜிஸ்டர் திருமணம் செய்துகொள்ளும் அளவுக்கு போனது பற்றி பேசுகிறார் வில்லி ராஜேஸ்வரி.

தான் பார்த்த பெண்ணை திருமணம் செய்துகொள்ளும்படி கூறுகிறார் ராஜேஸ்வரி, ஆனால் மகேஷ் அதற்கு ஒப்புக்கொள்ளவில்லை. அதனால் அவனை அறையில் வைத்து பூட்டிவிடுகிறார் வில்லி ராஜேஸ்வரி.

நந்தினி என்ட்ரி

அந்த நேரத்தில் போன் கூட செய்யாமல் வீட்டுக்கு வருகிறார் நந்தினி. அவர் வந்த போது அறையில் இருக்கும் மகேஷ் 'கதவை திறங்க அம்மா' என கத்துகிறார். அதை கேட்டு நந்தினி உண்மையை தெரிந்துகொள்கிறார்.

என்ன நடந்தது என நந்தினி கேட்க, ரெஜிஸ்டர் மேரேஜ் தொடங்கி நடந்தது அனைத்தையும் கூறுகிறார் வில்லி ராஜேஸ்வரி.

திடீரென வந்த அகிலா

ராஜேஸ்வரி மற்றும் நந்தினி இருவரும் அமர்ந்து பேசிக்கொண்டு இருந்த போது அகிலா அங்கு வருகிறார். நந்தினி சென்று ஒளிந்துகொள்கிறார். அதன் பின் உள்ளே வரும் அகிலாவிடம் ராஜேஸ்வரி பேசிக்கொண்டிருக்கிறார்.

மகேஷ் கதவை தட்டி கொண்டிருப்பதை அகிலாவும் கேட்டுவிடுகிறார். அதன் பின் ராஜேஸ்வரிக்கு அவர் அட்வைஸ் செய்கிறார். இந்த ஜெனரேஷன் பசங்களை பூட்டி வைத்து மிரட்டி எல்லாம் எதுவும் செய்ய முடியாது. அதனால் நீ பொறுமையாக பேசி புரியவை. பூட்டி எல்லாம் வைக்காதே என அட்வைஸ் கூறிவிட்டு செல்கிறார்.

டபுள் கேம் ஆடும் வில்லி

ராஜேஸ்வரி மகன் இருக்கும் அறையை திறக்கப் போனபோது நந்தினி வந்து தடுக்கிறார். அகிலா சொல்வதை கேட்காதே என சொல்லும் அவர், நிச்சயதார்த்தம் வரை மகனை பூட்டி வைப்பது தான் சரி என சொல்கிறார். மேலும் தாமதிக்காமல் நிச்சயதார்த்தம் வேகமாக செய் என சொல்கிறார். அதை கேட்டு 'நாளைக்கே நிச்சயதார்த்தம்' செய்துவிடலாம் என முடிவெடுக்கிறார் ராஜேஸ்வரி.

அதன் பின் அகிலாவுக்கு போன் செய்யும் அவர் மஹேஷிடம் பேசினேன், அவன் புரிந்துகொண்ட திருமணத்திற்கு ஒப்புக்கொண்டான் என சொல்கிறார். அகிலாவும் அதை கேட்டு மகிழ்ச்சி அடைகிறார். அவர் சொல்வது பொய் என அவருக்கு தெரிந்தால் தானே.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது, இனி என்ன நடக்கும் என்பதை நாளைய எபிசோடில் பார்க்காலம்.

அடுத்த செய்தி