ஆப்நகரம்

Sembaruthi Serial: அகிலாவுக்கு என்ன ஆச்சு.. பதறிப்போன ஆதி எடுத்த முடிவு!

அகிலா மயக்கம் அடைந்த நிலையில், அவரது மனதில் தான் பிரச்சனை என மருத்துவர் கூறுகிறார்.

Samayam Tamil 29 Mar 2021, 11:38 pm
செம்பருத்தி சீரியலில் இன்று அகிலா மயக்கமடைந்ததால் மொத்த குடும்பமும் அதிர்ச்சியில் இருக்கிறது.
Samayam Tamil sembaruthi serial written update aadhi decides stay with akhila
Sembaruthi Serial: அகிலாவுக்கு என்ன ஆச்சு.. பதறிப்போன ஆதி எடுத்த முடிவு!


மயங்கி விழுந்த அகிலா

ஆதி வீட்டை விட்டு கிளம்புவதாக கூறிவிட்டு சென்ற உடனேயே மயக்கம்போட்டு விழுகிறார் அகிலாண்டேஸ்வரி. ஆதி திரும்பி பார்க்கும்போது அவர் கீழே விழுந்து கிடக்கிறார். அவர் உடனே வந்து அவரை எழுப்ப முயற்சிக்கிறார். வீட்டில் இருக்கும் மற்றவர்களையும் அவர் அழைக்கிறார்.

அவர்களும் வேகமாக ஒடி வருகின்றனர். அவர்கள் வந்து எழுப்பியும் எந்த பயனும் இல்லை.

மருத்துவர் அறிவுரை

அதன் பின் மருத்துவருக்கு அருண் போன் செய்கிறார். அவர் வந்து பார்த்துவிட்டு அகிலாவுக்கு உடலில் எதுவும் இல்லை மனதில் தான் பிரச்சனை இருக்கிறது. அது என்ன என தெரிந்து சரிசெய்ய பாருங்கள் என கூறுகிறார்.

இன்னும் கொஞ்ச நேரத்தில் அகிலா மீனுடன் கண்விழித்துவிடுவார் என டாக்டர் கூறிவிட்டு செல்கிறார்.

இங்கேயே இருக்க முடிவெடுத்த ஆதி

நீங்கள் வீட்டை விட்டு செல்வது தான் அகிலாவின் மனதில் இருக்கும் குறை என பார்வதி கூறுகிறார். அவருக்காக நீங்கள் இங்கேயே இருக்க வேண்டும் என பார்வதி கூறுகிறார். ஆரம்பத்தில் ஆதி சற்று யோசிக்கிறார். அதன் பின் ஒப்புக்கொள்கிறார்.

சற்று நேரத்தில் அகிலா கண்விழித்த பிறகு ஆதி அவரிடம் நேரில் சென்று 'நான் இங்கேயே இருக்கிறேன்' என கூற அவர் மகிழ்ச்சியில் திளைக்கிறார்.

இதை எல்லாம் பார்த்து வில்லி வனஜாவுக்கு தான் வயிறெரிகிறது

அடுத்த செய்தி