ஆப்நகரம்

Sembaruthi Serial: நாளைக்கு கிளம்பனும்ல.. ஆதி - பார்வதி சந்தோசத்தை கெடுத்த வில்லி வனஜா

அகிலா திருமண நாளை கொண்டாட வந்திருக்கும் ஆதி மற்றும் பார்வதி மகிழ்ச்சியாக இருப்பதை பார்த்து வனஜா அதில் இடையில் புகுந்து கெடுத்துவிடுகிறார்.

Samayam Tamil 19 Mar 2021, 10:55 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் அகிலா திருமண நாளை மொத்த குடும்பத்தினரும் நடனம் ஆடி கொண்டாடுகின்றனர். அதன் பின் அனைவரும் ஒன்றாக நின்று குடும்ப போட்டோ எடுத்துக்கொள்கின்றனர். அதில் பார்வதியை நிற்க விடாமல் செய்ய வில்லி வனஜா போட்ட சதி திட்டமும் பெயில் ஆகிவிட்டது.
Samayam Tamil sembaruthi serial written update aadhi decides to go out
Sembaruthi Serial: நாளைக்கு கிளம்பனும்ல.. ஆதி - பார்வதி சந்தோசத்தை கெடுத்த வில்லி வனஜா


சந்தோஷத்தில் குடும்பம்

விழா முடிந்துவிட்ட நிலையில் ஆதி, அருண் மனைவிகளுடன் அமர்ந்து பேசி சிரித்துக் கொண்டிருக்கின்றனர். செங்கல் எடுத்து வைக்கும் போட்டி நடந்த நேரத்தில் பின்னர் இருந்த ஒரு ஜோடி போட்ட சண்டை பற்றி அவர்கள் பேசி சத்தமாக சிறிது கொண்டிருக்கின்றனர்.

ரொம்ப காலத்திற்கு பிறகு அவர்கள் இப்படி அமர்ந்து ஒன்றாக பேசுகின்றனர்.

நடுவில் புகுந்த வனஜா

அவர்கள் சத்தமாக பேசி சிரித்துக் கொண்டிருப்பதை பார்த்த வனஜா வயிற்றெரிச்சலில் பொங்குகிறார். அதை எப்படியாவது நிறுத்தவேண்டும் என கூறி நடுவில் சென்று பேசுகிறார். "இன்னும் தூங்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள், நாளை காலையில் ஆதி - பார்வதி கிளம்ப வேண்டுமே, போய் தூங்குங்கள்" என கூறுகிறார்.

இதை கேட்டு அருண் மற்றும் ஆதி எமோஷ்னல் ஆகி விடுகின்றனர். இருவரும் மிகவும் வருத்தத்துடன் தூங்க செல்கின்றனர்.

வருத்தத்தில் அகிலா

மறுபுறம் அகிலா தூங்காமல் தனது அறையில் அமர்ந்து யோசித்து கொண்டிருக்கிறார். ஆதி நாளை காலை கிளம்புவதாக கூறிவிடுவானோ என அவர் அதிகம் வருத்தமாக இருக்கிறார்.

என்ன செய்வது என தெரியாமல் குழப்பத்தில் இருக்கிறார். தூங்கிக்கொண்டிருந்த கணவரும் இவர் இப்படி இருப்பதை பார்த்து கேட்கிறார். அத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்க்கலாம்.

அடுத்த செய்தி