ஆப்நகரம்

Sembaruthi நிச்சயதார்த்தம் நின்றதற்கு பார்வதி தான் காரணம்! கோபத்தின் உச்சிக்கே சென்ற அகிலா

செம்பருத்தி சீரியலில் இன்று மகேஷ் நிச்சயம் நின்றதற்கு பார்வதி தான் காரணம் என அகிலாவுக்கு தெரியவர அவர் கோபத்தின் உச்சிக்கே சென்று இருக்கிறார்.

Samayam Tamil 20 Apr 2021, 11:19 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் மகேஷ் நிச்சயதார்த்தத்திற்காக அகிலா சென்றிருக்கிறார். ராஜேஸ்வரி அவரது மகனை அடைத்துவைத்து கட்டாயப்படுத்தி தான் இந்த திருமணத்தை நடத்தி வைக்கிறார்.
Samayam Tamil sembaruthi serial written update akhila shocked to know about parvathy stopping mahesh engagement
Sembaruthi நிச்சயதார்த்தம் நின்றதற்கு பார்வதி தான் காரணம்! கோபத்தின் உச்சிக்கே சென்ற அகிலா


தற்கொலை முயற்சி செய்யும் மகேஷ்

நிச்சயதார்த்தம் தொடங்கிவிட்ட நிலையில் ஆதி மற்றும் பார்வதி இருவரும் அங்கு வர தாமதம் ஆகிறது. அதனால் இனியும் தாமதிக்க கூடாது என எண்ணி ஆதி சொன்னது போல ஒரு விஷயத்தை செய்கிறார் மகேஷ். வேகமாக கழுத்தில் இருக்கும் மாலையை தூக்கி போட்டு சென்று உடல் மண்ணெண்ணெய் ஊற்றிக்கொள்கிறார்.

கையில் லைட்டரை பற்றவைத்து கொண்டு யாரும் அருகில் வந்தால் தீ வைத்து கொள்வேன் என மிரட்டுகிறார். எனக்கு நிச்சயதார்த்தத்தில் விருப்பம் இல்லை என சொல்கிறார்.

கன்னத்தில் அறையும் அகிலா

மகேஷிடம் லைட்டரை கீழே போடு என சொல்கிறார் அகிலா. ஆனால் அவர் கேட்பதில்லை. இறுதியில் அகிலா அதை தட்டிவிட்டு மகேஷ் கன்னத்தில் பளார் என அறைவிடுகிறார்.

'நீ சரி என சொன்ன பின் தானே இந்த நிச்சயதாத்தம் நடக்கிறது' என கேட்கிறார் அகிலா. ஆனால் நான் ஒப்புக்கொள்ளவே இல்லை, என்னை பூட்டி வைத்து மிரட்டி தான் இந்த நிச்சயதார்த்தம் நடக்கிறது என மகேஷ் விளக்கம் அளிக்கிறார்.

உன் மருமகள் தான் காரணம்

மகேஷ் சொன்னதை கேட்டு அதிர்ச்சி ஆகும் அகிலா ராஜேஸ்வரியை திட்டுகிறார். உடனே அவர் 'இந்த பிரச்சனைக்கு எல்லாம் உன் மருமகள் பார்வதியும், மகன் ஆதியும் தான் காரணம். அவங்க தான் மகேஷை இப்படி மாற்றி வைத்திருக்கிறார்கள். நான் சொன்ன ரௌடி பொண்ணு உன் மருமகள் பார்வதி தான்' என ராஜேஸ்வரி கூற அகிலா அதை நம்ப மறுக்கிறார்.

அந்த நேரத்தில் தான் ஆதி மற்றும் பார்வதி இருவரும் வந்து சேர்க்கின்றனர்.

அதிர்ச்சி ஆகும் அகிலா

ஆதி மற்றும் பார்வதி இருவரும் அங்கு வந்ததை பார்த்து அகிலா அதிர்ச்சி அடைகிறார். மிகவும் கோபமாக அங்கிருந்து எதுவும் பேசாமல் சென்றுவிடுகிறார். அருண் மற்றும் ஐஸ்வர்யா இருவரும் வந்து நடந்ததை சொல்கிறார்கள்.

இனி எல்லா பழியும் அண்ணி மீது தான் விழும், அம்மாவை எப்படி சமதப்படுத்துவீர்கள் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

கொந்தளித்த ராஜேஸ்வரி

அதன் பின் தனது மானமே போய்விட்டதே என ராஜேஸ்வரி கொந்தளிக்கிறார். வீட்டில் இருக்கும் பொருட்களை அடித்து உடைக்கிறார். அதன் பின் மகேஷை அழைத்து பேசுகிறார்.

ஆனால் மகேஷ் தன்னால் திருமணம் செய்து கொள்ள முடியாது என இறுதியாக கூறிவிடுகிறார். அதனால் ராஜேஸ்வரி கோபம் உச்சிக்கே செல்கிறது.

மறுபுறம் அகிலா கடும் கோபத்துடன் வீட்டிற்கு சென்று அமர்கிறார். அப்போது ஆதி பார்வதி இருவரும் வந்து சேர்கின்றனர். அகிலா என்ன சொல்ல போகிறார் என்பது நாளைய எபிசோடில் தான் தெரியவரும்.

அடுத்த செய்தி