ஆப்நகரம்

Sembaruthi Serial: ஆளே மாறிப்போன பார்வதி.. பார்த்து சர்ப்ரைஸ் ஆன அகிலா

செம்பருத்தி சீரியலில் இன்று பாரதி ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு ஸ்டைலாக மாறி இருக்கிறார்.

Samayam Tamil 12 Mar 2021, 10:55 pm
செம்பருத்தி சீரியல் நேற்றைய எபிசோடில் ஆதி வாங்கி கொடுத்த புடவையை கட்ட மாட்டேன் என் அடம்பிடித்து கொண்டிருக்கிறார் பாரவ்தி.
Samayam Tamil sembaruthi serial written update akhila surprised by parvathys transformation
Sembaruthi Serial: ஆளே மாறிப்போன பார்வதி.. பார்த்து சர்ப்ரைஸ் ஆன அகிலா


எனக்கு கிராண்ட் செட் ஆகாது

ஆதி எவ்வளவு சொல்லியும் கேட்காத பார்வதி, எனக்கு சிம்பிளான புடவை தான் செட் ஆகும் என தெரிவிக்கிறார். அப்போது அங்கு வரும் ஐஸ்வர்யாவுக்கு பார்வதிகு அட்வைஸ் செய்கிறார். எல்லாத்தையும் பழகி கொள்ள வேண்டும் என கூறுகிறார் அவர்.

இந்த விழாவுக்காவது இந்த புடவையை போட்டுக்கொண்டு வா என ஆதி கேட்கிறார். அம்மா எதிர்பார்க்கும் முக்கியமான குவாலிட்டியில் இதுவும் ஒன்று அவர் கூறிய பிறகு தான் ஆதி புடவையை மாற்ற ஒப்புக்கொள்கிறார்.

பார்வதியை அழகாக மாற்றும் ஐஸ்வர்யா

அவரது முழு தோற்றத்தையும் மாற்றி காட்டுகிறேன் என ஐஸ்வர்யா அழைத்து செல்கிறார். அங்கு பார்வதிக்கு மேக்கப், லிப்ஸ்டிக் என அனைத்தையும் பயன்படுத்தி இன்னும் அழகாக மாற்றி விடுகிறார்.

அதன் பின் பார்வதி வெளியில் வந்தபோது அனைவரும் பார்த்து ஆச்சர்யப்படுத்துகின்றனர். ஹாலிவுட் நடிகை போல இருக்கிறாரே என வடிவேலு வியந்து கூறுகிறார்.

ஏமாந்து போன வில்லிகள்

பார்வதி புது தோற்றத்தை மேலே இருந்து பார்க்கும்போது ஒரு நடிகை போலவே இருக்கிறது என உமா கூறிக்கொண்டு இருக்கிறார். அது பாலிவுட் நடிகை கத்ரீனா கைப் என வடிவேலு அவரிடம் சொல்ல, அவர் வேகமாக உள்ளே சென்று வில்லி வனஜாவிடம் கூறுகிறார்.

அவர்கள் இருவரும் வந்து 'வணக்கம் மேடம்' என கூறி கையெடுத்து கும்பிட்டுவிட்டு பார்க்கும்போது தான் அது பார்வதி என தெரிகிறது. இதனால் வனஜா கோபம் அடைகிறார்.

நல்ல லுக் ஆன மருமகள் தான்

அகிலா மற்றும் கணவர் இருவரும் கொண்டாட்டம் நடக்கும் இடத்தில் இருக்கிறார்கள். அப்போது அனைவரும் உங்கள் மகன், மருமகள் வரவில்லையா என கேட்கிறார்கள்.

அப்போது பார்வதி நடந்து வந்ததை பார்த்து கெஸ்ட் ஆக வந்தவர்கள் வாய் பிளக்கிறார்கள். 'உங்க குடும்பத்திற்கும், high சொசைட்டிக்கும் ஏற்றது போல ஒரு லுக் ஆன பெண்ணாக தான் இருக்கிறார் உங்க மருமகள்' என அகிலாவின் தோழி ஒருவர் கூறுகிறார்.

அகிலாவும் பார்வதி இப்படி மாறி இருப்பதை பார்த்து வியந்து நிற்கிறார். இதோடு இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி