ஆப்நகரம்

Sembaruthi Serial: பார்வதிக்கு என்னாச்சு.. காலில் அடிபட்டதை பார்த்து குடும்பத்தினர் ஷாக்

செம்பருத்தி சீரியலில் இன்று ஆதி கால் அடிபட்ட நிலையில் வீட்டுக்கு வருகிறார். அதை பார்த்து அனைவரும் அதிர்ச்சி ஆகின்றனர்.

Samayam Tamil 25 Mar 2021, 3:54 pm
நேற்றைய செம்பருத்தி சீரியல் எபிசோடில் ஆதி மற்றும் பார்வதி தங்கள் வீட்டுக்கு கிளம்ப முடிவெடுத்து இருந்த நிலையில், பார்வதி அருகில் இருக்கும் கோவிலுக்கு சென்றுவிட்டு வருவதாக கூறிவிட்டு கிளம்புகிறார். அதற்கு முன்பே அவர் மருத்துவமனைக்கு போன் செய்து 'பார்வதி என்பவர் கால் அடிபட்டு வருவார்' என சொல்லி தயாராக இருக்க சொல்கிறார். அதனால் அவர் வேண்டுமென்றே காலை எதோ செய்து கொள்ள போகிறார் என ரசிகர்கள் நினைத்தனர்.
Samayam Tamil sembaruthi serial written update parvathy returns home with injured leg
Sembaruthi Serial: பார்வதிக்கு என்னாச்சு.. காலில் அடிபட்டதை பார்த்து குடும்பத்தினர் ஷாக்


பார்வதியை பின் தொடரும் வனஜா

கோவிலுக்கு செல்வதாக கூறிவிட்டு செல்லும் பார்வதியை காரில் பின்தொடர்கின்றார் வனஜா. ஆனால் ஒரு கட்டத்தில் பார்வதி எங்கு சென்றார் என தெரியவில்லை. அதனால் அவர் உமா உடன் சேர்ந்து அருகில் இருக்கும் அனைத்து மருத்துவமனைக்கும் சென்று பார்கிறார்கள். 'பார்வதி என்று பெயரை யாரவது அட்மிட் ஆகி இருக்கிறார்களா?' என ஹாஸ்பிடல் ஹாஸ்ப்பிடலாக ஏறி சென்று விசாரிக்கிறார்கள்.

கலக்கத்தில் பார்வதி

அகிலா ஆதி இன்று கிளம்பி சென்றுவிடுவேன் என போனில் சொன்னதை பற்றி நினைத்து வருத்தத்தில் இருக்கிறார். ஆதி உடன் இத்தனை நாட்கள் இருந்தது பற்றி நினைத்து பார்த்து கலக்கம் அடைகிறார். அகிலா கண்ணீர் விட்டு பூஜை அறையில் கடவுள் முன்பு பேசியதை பற்றி நினைத்து பார்க்கிறார் பார்வதி.

ஆதியை அவர் கடந்த சில நாட்களாக எப்படி பார்த்துக்கொண்டார் என்பதையும் நினைத்து பார்க்கிறார்.

வீட்டுக்கு திரும்பிய வனஜா

வனஜா தொடர்ந்து பல மருத்துவமனைகளுக்கு பார்வதியை தேடி சென்ற நிலையில் எங்கும் அவர் கிடைக்கவில்லை. இறுதியில் உமா ஒரு கேள்வியை கேட்கிறார். பார்வதி வேறு எதாவது பெயரை கூறி இருந்தால் என்ன செய்வீர்கள் என அவர் கேட்க வனஜா குழப்பம் அடைகிறார்.

அதனால் இனியும் தேடாமல் உடனே வீட்டுக்கு கிளம்பலாம் என முடிவெடுத்து இருவரும் வீட்டுக்கு கிளம்பிவிடுகின்றனர்.

காலில் கட்டுடன் வரும் பார்வதி

அதன் பின் அவர்கள் வீட்டுக்கு சென்று பார்த்தபோது ஆதி பார்வதி மீண்டும் எப்போது வருவார் என காத்திருக்கிறார். சீக்கிரம் கிளம்பவேண்டும் என்றும் சொல்கிறார். அந்த நேரத்தில் மாடியில் இருந்து அகிலாவும் கீழே வருகிறார்.

பார்வதி காலில் கட்டுடன், கையில் வாக்கிங் ஸ்டிக் உடன் வீட்டுக்குள் வருகிறார். அவரை கஜேந்திரன் அழைத்து வருகிறார். அதை பார்த்து அனைவரும் கடும் அதிர்ச்சி அடைகின்றனர். அவருக்கு என்ன ஆனது என கேட்கின்றனர்.

அப்போது குறுக்கிட்ட வனஜா அது பொய் கட்டு என கூறுகிறார். இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது.

அடுத்த செய்தி