ஆப்நகரம்

திருமணமான சில மாதங்களில் பிரிவு.?: விஜய் டிவி சீரியல் ஜோடிகளால் ரசிகர்கள் அதிர்ச்சி.!

சீரியல் நடிகை சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பகிர்ந்துள்ள பதிவு சோஷியல் மீடியாவில் படு வேகமாக வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 9 May 2023, 8:27 am
சின்னத்திரையில் விஜய் டிவி சீரியல் மூலம் பிரபலமானவர்கள் சம்யுக்தா மற்றும் விஷ்ணுகாந்த். இவர்கள் இருவரும் 'சிப்பிக்குள் முத்து' என்ற சீரியலில் நடித்து வருகின்றனர். அண்மையில் இவர்கள் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் திருமணமாகி இரண்டே மாதத்தில் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் ஜோடி பிரிந்துவிட்டதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil சம்யுக்தா - விஷ்ணுகாந்த்
சம்யுக்தா - விஷ்ணுகாந்த்


சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் பல சீரியல்களில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர்களாக திகழ்ந்தனர். இந்நிலையில் தான் திடீரென தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தின் மூலம் தங்களின் காதலை ரசிகர்களுக்கு தெரிவத்தனர். முதலில் சம்யுக்தா, விஷ்ணுகாந்தை டேக் செய்து 'எல்லா குழப்பங்களுக்கும் நடுவில் உன்னை நான் பார்த்தேன். என் வாழ்வின் அனைத்து துவன்பங்களையும் மாற்றும் உங்களுடன் நான் இருக்கும் பொது மகிழ்ச்சியாக உணர்கிறேன்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

என் வாழ்வில் நீங்கள் வந்ததற்கு மிக்க நன்றி என பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அண்மையில் இவர்களது திருமணம் வெகு விமர்சையாக நடந்து முடிந்தது. சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இந்த காதல் தம்பதியினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இந்நிலையில் தான் இவர்கள் இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பாக்கியலட்சுமி சீரியல்: கொலை பழி சுமத்திய கோபி, ஈஸ்வரி: கதறி அழுத ராதிகா.!

அதாவது விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவரும் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து திருமண புகைப்படங்களை நீக்கம் செய்தனர். மேலும் ஒருவரை ஒருவர் அன்பாலோவும் செய்தனர். இதனால் ஷாக்கான ரசிகர்கள், இதுக்குறித்து அவர்களிடமே கேள்வி எழுப்பினர். அதற்கு விஷ்ணுகாந்த் விரைவில் எல்லாம் தெரிய வரும் என கூறினார்.


இந்நிலையில் சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில், டியர் ஹேட்டர்ஸ் நீங்கள் நினைத்தது நடந்து விட்டது. இனிதான் என் வாழ்க்கை துவங்க இருக்கிறது. நீங்கள் கற்பனையே செய்யாத அளவுக்கு எல்லாம் நடக்கும். அதனால் ஏமாற்றத்தை தாங்கி கொள்ள தேவையான வலுவை பெற்று கொள்ளுங்கள் என பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவருக்கும் இடையில் என்னதான் நடக்கிறது என கடுமையாக குழப்பமடைந்துள்ளனர்.

Pandian Stores: அண்ணனிடம் உண்மையை மறைத்த கதிர்: கோபத்தில் கொந்தளித்த மூர்த்தி.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி