ஆப்நகரம்

Serial Actress Samyuktha: விஷ்ணுகாந்த் மிரட்டுகிறார்: சீரியல் நடிகை சம்யுக்தா பரபரப்பு குற்றச்சாட்டு.!

சீரியல் நடிகை சம்யுக்தா தன்னுடைய இன்ஸ்டாகிராம் லைவில் தோன்றி விஷ்ணுகாந்த் மீது பரபரப்பு குற்றம் சுமத்தி பேசியுள்ளார்.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 17 May 2023, 6:36 pm
சின்னத்திரை பிரபல ஜோடிகளான விஷ்ணுகாந்த், சம்யுக்தா இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டி வருவது பரபரப்பை கிளப்பி வருகிறது. காதலித்து திருமணம் செய்து கொண்ட இவர்கள் தற்போது பிரிந்து வாழ்கின்றனர். இந்நிலையில் சம்யுக்தா தற்போது இன்ஸ்டாகிராம் லைவில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil சம்யுக்தா
சம்யுக்தா


'சிப்பிக்குள் முத்து' சீரியலில் நடித்து பிரபலமானவர்கள் சம்யுக்தா, விஷ்ணுகாந்த். சீரியல் மூலம் பிரபலமான இந்த ஜோடி சமூக வலைத்தளத்தில் தங்களின் காதலை ரசிகர்களுக்கு அறிவித்தனர். இதனையடுத்து எட்டு மாதங்களாக காதலித்து வந்த இந்த ஜோடி கடந்த மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டனர். சின்னத்திரை பிரபலங்கள் பலரும் இவர்களின் திருமணத்தில் கலந்துக்கொண்டனர்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இந்நிலையில் சம்யுக்தா, விஷ்ணுகாந்த் இருவரும் தங்களது திருமணம் தொடர்பான புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் இருந்து டெலிட் செய்தனர். அத்துடன் ஒருவரை ஒருவர் அன்பாலோ செய்தனர். இதனால் இவர்கள் பிரிந்து விட்டதாக இணையத்தில் செய்திகள் பரவியது. அதனை தொடர்ந்து இருவரும் மாறி மாறி ஒருவரை குற்றம் சுமத்தி வருகின்றனர்.

இதனையடுத்து தங்களின் பிரிவு குறித்து முதன்முறையாக பேசிய விஷ்ணுகாந்த், தங்களின் பிரிவுக்கு காரணம் சம்யுக்தாவின் தந்தை தான் என தெரிவித்தார். காதலித்த எட்டு மாதங்களில் தங்களிடையே பிரச்சனை வராத நிலையில் திருமணமான 15 நாட்களில் பிரச்சனை ஏற்பட்டதாக கூறினார். விஷ்ணுகாந்தின் பேட்டியை தொடர்ந்து சம்யுக்தா தனது இன்ஸ்டாகிராம் லைவில் பேசினார்.

பாக்கியலட்சுமி சீரியல்: கையும் களவுமாக சிக்கிய கோபி: வெளுத்து வாங்கிய ராதிகா.!

அதில் விஷ்ணுகாந்தை குறை சொல்லி எனக்கு ஒன்னுன்னா என் அப்பா தான் வருவார். இதற்கு மேல் எதுவாக இருந்தாலும் போலீஸ் ஸ்டேஷன் அல்லது கோர்ட்டில் பேசி கொள்ளலாம் என தெரிவித்திருந்தார். இந்நிலையில் இன்று ஆறு மணிக்கு விஷ்ணுகாந்த் லைவில் வருவேன் என கூறியிருந்த நிலையில் அவருக்கு முன்பாக சம்யுக்தா இன்ஸ்டாகிராம் லைவிற்கு வந்தார்.

அப்போது என்னுடைய ரிலேட்டிவிடம் போன் பண்ணி மிரட்டுகிறார். நான்கு மணி நேர ஆடியோ, வீடியோ இருக்கு. அவளுடைய பாஸ்ட் பற்றி எல்லாம் சொல்லுவேன் என விஷ்ணுகாந்த் மிரட்டியுள்ளதாகவும், இது தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இதனையடுத்து விஷ்ணுகாந்த் தன்னுடைய லைவில் சம்யுக்தா ரிலேட்டிவிடம் பேசிய ஆடியோவை பிளே பண்ணி காண்பித்து தான் எதுவும் மிரட்டிவில்லை என நிருபித்துள்ளார். சமூக வலைத்தளத்தில் இருவரும் மாறி மாறி ஒருவரை ஒருவர் குற்றம் சுமத்தி வருவது பரபரப்பை கிளப்பி வருகிறது.

Pandian Stores: வீட்டை விட்டு கிளம்பிய மூர்த்தி, தனம்.. மீண்டும் உடையும் பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பம்.!
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி