ஆப்நகரம்

சிம்புவை கல்யாணம் பண்ணிக்கிறதுல ஒரேயொரு சிக்கல்: சீரியல் நடிகை சொன்ன சீக்ரெட்.!

சீரியல் நடிகை ஸ்ரீநிதி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சிம்பு பற்றி பகிர்ந்துள்ள கருத்து ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

Samayam Tamil 13 May 2022, 10:49 am
சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் நடிகை ஸ்ரீநிதி. விஜய் டிவியில் அறிமுகமாகி யாரடி நீ மோகினி சீரியலில் பட்டி தொட்டி எங்கும் பிரபலமானார் நடிகை ஸ்ரீநிதி. வலிமை படம் குறித்து இவர் பகிர்ந்த வீடியோ ஒன்று கடும் சர்ச்சைகளை கிளப்பியது. இந்நிலையில் சிம்பு குறித்து ஸ்ரீநிதி தெரிவித்துள்ள விஷயம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
Samayam Tamil Sreenidhi
Sreenidhi


'வலிமை' படம் தொடர்பாக இவர் பகிர்ந்த நெகட்டிவ் விமர்சனங்கள் அஜித் ரசிகர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து ரசிகர்கள் இவரை சமூக வலைத்தள பக்கங்களில் கண்டமேனிக்கு கழுவி ஊற்றி வைத்தனர். இது ஒரு புறம் இருக்க, சமீபத்தில் டிப்ரஷன் தொடர்பாக ஸ்ரீநிதி பகிர்ந்திருந்த விஷயங்கள், அதிகம் பரபரப்பை உண்டு பண்ணியது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனிடையே, தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், ஸ்ரீநிதி பகிர்ந்துள்ள ஸ்டோரி ஒன்று, இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 'ஒரு நாள் அனைவரும் திருமணம் செய்து கொள்வார்கள். நானும் சிம்புவும் தான் மீதம் இருப்போம்' என குறிப்பிடப்பட்ட மீம் ஒன்றை பகிர்ந்திருந்தார்.

இதற்கு, 'நீங்கள் இரண்டு பேரும் ஏன் திருமணம் செய்து கொள்ளக் கூடாது?' என துப்பாக்கி படத்தில் விஜய், காஜலிடம் ஜெயராம் சொல்லும் டெம்லேட் மீமை ரிப்ளேவாக பகிர்ந்தனர் நெட்டிசன்கள்.

அதற்கு, ஸ்ரீநிதி, "நன்றாக தான் இருக்கும். ஆனா, எனக்கு இப்போ ஆள் இருக்கே" என ஜாலியாக குறிப்பிட்டுள்ளார். சிம்புவை திருமணம் செய்ய ஆசை இருந்தும், காதலர் உள்ளதை யார் என குறிப்பிடாமல், ஜாலியாக இன்ஸ்டாவில் பதிவிட்டுள்ளார் ஸ்ரீநிதி. அவரின் இந்த பதில் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அடுத்த செய்தி