ஆப்நகரம்

சிவகாமியிடம் மாட்டிக்கொண்டு தவிக்கும் அர்ச்சனா.. ராஜா ராணி 2 அப்டேட்

வீட்டில் திருட்டு நடந்ததற்கு காரணம் அர்ச்சனா தான் என தெரிந்ததும், அவருக்கு தண்டனையாக தனது பெற்றோர் வீட்டிற்கு அனுப்ப முடிவு செய்கிறார் சிவகாமி.

Samayam Tamil 11 Dec 2020, 12:13 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல் ராஜா ராணி 2. சரவணன் சந்தியா இருவரும் தன் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு செல்கிறார். சென்ற இடத்தில், தன்னுடைய கடையில் வேலை செய்யும் சர்க்கரையின் அண்ணன் கடையை திறந்து வைக்கிறார் சரவணன். அப்போது சந்தியாவிற்கு சரவணன் படிக்காதவர் என்ற உண்மை தெரிய வருகிறது.
Samayam Tamil Raja Rani 2


சரவணன் தொழிலதிபராக இருப்பார் என்று நினைத்த சந்தியாவிற்கு, அவர் இனிப்பகம் வைத்திருக்கும் சமையல்காரர் என்ற உண்மை தெரிய வருகிறது. அது தெரிந்ததும் தான் ஏமாற்றப்பட்டதை நினைத்து வருத்தப்படுகிறார். அதேபோல் சரவணன் குடும்பத்தில் தன்னையும் படிக்காதவர் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரியவருகிறது.

உண்மையை தெரிந்து கொண்ட சந்தியா அனைவரும் தூங்கிய பிறகு தன்னை ஏமாற்றி ஒரு சமயல்காரருக்கு திருமணம் செய்து வைத்து விட்டதாக இறந்து போன தன் அம்மா அப்பாவிடம் கூறி அழுகிறார். ஊருக்கு சென்றதும் முதல் வேலையாக தான் படித்தவர் என்ற உண்மையை குடும்பத்தில் உள்ள அனைவரிடமும் சொல்லிவிட வேண்டும் என சந்தியா முடிவெடுக்கிறார்.

மறுநாள், அர்ச்சனா செந்தில் அனைவரும் கோயிலுக்கு சென்றவர்கள் வீட்டிற்கு வந்துவிடுவார்களே என்ற பயத்துடன் இருக்கிறார்கள். வீட்டில் திருட்டு நடந்தது சிவகாமிக்கு தெரிந்தால் என்ன செய்வது என தெரியாமல் பதட்றத்தில் இருக்கிறார்கள்.

பிறகு சிவகாமியும் குடும்பத்தினரும் ஒருவழியாக வீட்டிற்கு வருகிறார்கள். மாமியாரிடம் தான் படித்தவர் என்ற உண்மையை சொல்ல வேண்டும் என சந்தியா முயற்சி செய்கிறார். சிவகாமியோ எதுவாக இருந்தாலும் நாளை பேசிக் கொள்ளலாம் எனக் கூறி விடுகிறார்.

அதன்பின் அறைக்குச் சென்ற சந்தியா தன்னுடைய அலமாரியை திறந்து பார்க்கிறார். அதில் தன்னுடைய நகை பெட்டியில் நகை இல்லாததால் அதிர்ச்சி அடைகிறார். அவரின் நகை காணாமல் போனது சிவகாமிக்கும் தெரியவருகிறது. என்ன ஆனது என அர்ச்சனா, செந்தில் என அனைவரிடமும் விசாரிக்கிறார். ஆனால் அனைவரும் பொய் கூறுகிறார்கள்.

பிறகு ஆதியை அடித்து உண்மையை கேட்கிறார் சிவகாமி. ஆதி, பார்வதி ,செந்தில் மூவருமே நாங்கள் வெளியே சென்றதர்க்கு அர்ச்சனா தான் காரணம் என அவர் மீது பழி சுமத்துகிறார்கள். அர்ச்சனா தவறு செய்ததால் என்ன செய்வது என்று தெரியாமல் அழத்தொடங்குகிறார்.

சிவகாமி அர்ச்சனாவின் பெற்றோருக்கு ஃபோன் செய்து அவர்களை வரவழைக்கிறார். அவர்களிடம் அர்ச்சனா செய்த தவறுக்கு அவரை உங்கள் வீட்டிற்கு அழைத்துச் செல்வதே சரியான தண்டனை என்றும் அப்போதுதான் அவருக்கு தான் செய்தது தவறு என தெரியவரும் என கண்டிப்பாக கூறிவிடுகிறார் சிவகாமி.

அடுத்த செய்தி