ஆப்நகரம்

Mr and Mrs. Chinnathirai 3ல் இருந்து திடீரென வெளியேற இதுதான் காரணம்.. சோபியா மணிகண்டன்

Mr and Mrs. Chinnathirai 3ல் இருந்து திடீரென வெளியேறியது ஏன் என சோபியா விளக்கம் அளித்து இருக்கிறார்.

Samayam Tamil 25 Aug 2021, 2:41 am

ஹைலைட்ஸ்:

  • மருத்துவர் முழு ஓய்வில் இருக்க சொன்னதால் வேறு வழி இல்லாமல் வெளியேறினோம்.
  • கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் வருவோம்.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Sofia and Manikandan
மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை மூன்றாவது சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வந்தவர்கள் சோபியா - மணிகண்டன் ஜோடி. அவர்கள் பர்ஃபாமன்ஸ் அனைவரையும் கவரும் விதமாக தான் இருந்து வந்தது.
இந்நிலையில் அவர்கள் திடீரென ஷோவில் இருந்து வெளியேறிவிட்டதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. அது அவர்களது ரசிகர்களுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தற்போது ஷோவில் இருந்து வெளியேறியதற்காக உண்மையான காரணத்தை சோபியா தெரிவித்து உள்ளார்.

"தாமதமாக பதிலளிப்பதற்காக மன்னனித்து விடுங்கல். நாங்கள் ஏன் மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை 3ல் பங்கேற்கவில்லை என அதிகம் அன்புடன் மெசேஜ்கள் வந்தன. எனக்கு சில மெடிக்கல் பிரச்சனைகள் வந்ததால் மருத்துவர்கள் முழு ஓய்வில் இருக்க அட்வைஸ் செய்தார்கள்."

"அதனால் வேறு வழி இல்லாமல் நாங்கள் வெளியேறினோம். கண்டிப்பாக வைல்டு கார்டு ரவுண்டில் நாங்கள் வருவோம்" என சோபியா தெரிவித்து உள்ளார்.

அடுத்த செய்தி