ஆப்நகரம்

சன் டிவியில் ராசி பலன் வாசிச்ச விஜே விஷால் சுந்தர் இப்போ என்ன பண்ணுறாரு தெரியுமா?

சன் டிவியில் தினமும் காலையில் ராசி பலன் வாசித்த விஜே விஷால் சுந்தர், வேலை காரணமாக மீண்டும் லண்டன் செல்ல இருக்கிறார்.

Samayam Tamil 10 Apr 2019, 4:47 pm
சன் டிவியில் தினமும் காலையில் ராசி பலன் வாசித்த விஜே விஷால் சுந்தர், வேலை காரணமாக மீண்டும் லண்டன் செல்ல இருக்கிறார்.
Samayam Tamil விஜே விஷால் சுந்தர்


தினமும் காலையில் ராசியான நிறம், இன்று உங்களுக்கு அனுகூலமான திசை மேற்கு, வடக்கு, என்று அனைத்து ராசிகளின் நேரத்தை புட்டு புட்டு என்று வைத்தவர் விஜே விஷால் சுந்தர். கிட்டத்தட்ட 18 வருடங்களாக சன் டிவியில் பணியாற்றியுள்ளார். தினமும், காலையில், இவரது குரலை கேட்கதாவர்கள் யாரும் இருக்க முடியாது.

ஆனால், இப்போதெல்லாம் இவர், வருவது இல்லை. ஆம், டிசிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிக் கொண்டு பகுதி நேரமாக தினமும் காலையில், ராசி பலன் வாசித்து மிகவும் பிரபலமானார். ஐடி கம்பெனியில் கை நிறைய சம்பளம், பேர் சொல்லும்படி சன் டிவியில் ராசி பலன் புரோகிராம் என்று கலக்கியவர். ஆனால், ஒரு கட்டத்தில் வேலை விஷயமாக 3 ஆண்டுகளுக்கு லண்டன் செல்ல வேண்டியிருந்ததால், ராசி பலன் நிகழ்ச்சியிலிருந்து விலகியுள்ளார்.

அண்மையில், பிரபல பத்திரிக்கை ஒன்றிற்கு இவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது: வேலையின் காரணமாக 3 வருடம் லண்டனில் இருக்க வேண்டியதாக இருந்தது. லண்டனில் இருந்து வந்ததுக்கு அப்புறம் பார்ட் டைம் ஒர்க் பண்ணலாம் என்று டெஸ்ட் ஷூட் போயிருந்தேன். ஆனால், அதற்குரிய ரிசல்ட் ஏதும் எனக்கு வரவில்லை. மீடியாவில் இருந்து நான் நிறைய விஷயங்கள் கற்றுக் கொண்டேன். இதன் மூலம் பலரும் அறியும்படியான ஒரு பிரபலமாக திகழ்ந்தேன். அதுவே ஐடி நிறுவனம் எனக்கு வளர்ச்சியை கொடுத்தது.

நான் எதற்காகவும், எனது வேலையை மட்டும் விடக்கூடாது என்ற முடிவில் இருக்கிறேன். இப்பவும், எனது ரசிகர்கள் என்னைப் பற்றி விசாரிப்பது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. மறுபடியும் வேலை காரணமாக லண்டன் செல்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி