ஆப்நகரம்

'சுந்தரி' - சன் டிவியின் புது சீரியல் எப்படி இருக்கு? முதல் எபிசோடு அப்டேட்

சுந்தரி சீரியல் இன்று முதல் சன் டிவியில் ஒளிபரப்பாகிறது.

Samayam Tamil 23 Feb 2021, 12:50 am
சன் டிவியின் புது சீரியல் சுந்தரி இன்று முதல் ஒளிபரப்பாக தொடங்கி இருக்கிறது. இந்த சீரியலின் டீஸர் சமூக வலைத்தளங்களில் அதிகம் பரவி இருந்தது. அதில் சீரியல் ஹீரோயின் கருப்பாக இருப்பதால் மிகவும் தாழ்வு மனப்பான்மையுடன் இருப்பது காட்டப்பட்டு இருந்தது.
Samayam Tamil sundari serial review sun tv new serial talks about issues faced by dark girl
'சுந்தரி' - சன் டிவியின் புது சீரியல் எப்படி இருக்கு? முதல் எபிசோடு அப்டேட்


இதனால் இணையவாசிகள் இதை பற்றி அதிகம் பேசினார்கள். சுந்தரி சீரியல் இன்று முதல் ஒளிபரப்பை தொடங்கி இருக்கிறது. முதல் எபிசோடில் என்ன நடந்தது என பார்க்கலாம்.

திருவிழா

சுந்தரி சீரியல் முதல் நாள் எபிசோடிலேயே ஊரில் அனைவரும் கோவில் திருவிழாவுக்காக முளைப்பாரி எடுத்துவந்து கோவிலில் காத்திருக்கிறது. அனைவரும் சுந்தரிக்காக தான் காத்திருக்கிறார்கள். சுந்தரி கோவில் சன்னிதானத்தில் பிறந்தவள், அவரை அம்மனின் மகளாக பார்க்கிறோம் என சொல்கிறார் ஊரின் தலைவர்.

சுந்தரியின் அம்மா மளிகை கடை வைத்திருக்கிறார். அவருக்கு போன் செய்து மாலை எங்கே என கேட்கிறார்கள். அனைவரும் காத்துக்கொண்டிருக்கிறோம், உடனே அனுப்புங்கள் என சொல்கிறார்கள்.(Pic Credits: Sunnxt)

IAS கனவு காணும் சுந்தரி

சுந்தரி பள்ளியில் ஆசிரியையிடம் தான் கலெக்ட்ர் ஆக போவதாக சொல்கிறார். அதை மற்ற மாணவர்கள் கிண்டல் செய்கிறார்கள். ஆனால் அந்த நேரத்தில் அம்மா வைத்து அடித்து சுந்தரியை எழுப்பி விடுகிறார். அப்போது தான் தெரிகிறது அது கனவு என்று.

சுந்தரியை அடித்து மாலையை எடுத்துக்கொண்டு கோவிலில் சேர்க்கும்படி கூறுகிறார். அவரும் பாட்டியுடன் சைக்கிளில் சொல்கிறார். செல்லும் வழியில் சைக்கிள் செயின் பிஞ்சிவிடுகிறது. அதனால் தாமதாமாக சைக்கிளை தள்ளிக்கொண்டே சென்று மாலையை அம்மனுக்கு கொடுக்கிறார்கள்.

(Pic Credits: sunnxt)

சோகமான சுந்தரி

கோவிலில் இருக்கும் இளைஞர்கள் சிலர் சுந்தரி பற்றி கேவலமாக பேசி கிண்டல் செய்கிறார்கள். அதை கேட்டு சோகம் அடைகிறார் சுந்தரி.

தான் ஐஏஎஸ் ஆவேனா என பூ போட்டு காட்டும்படி அம்மனிடம் வேண்டிக்கொள்கிறார் சுந்தரி. ஆனால் அப்படி எதுவும் நடக்காததால் அவர் மேலும் சோகமாக ஆகிறார்.

அவரது பாட்டி அப்போது வந்து அந்த இளைஞர்களை திட்டி அனுப்பிவிடுகிறார். அவர்களும் பயந்து கொண்டு ஓடிவிடுகிறார்கள்.

(Pic Credits: Sunnxt)

அம்மன் போட்ட மாலை?

அம்மன் பூ போடவில்லை என சுந்தரி மிகவும் சோகமாக இருந்த நேரத்தில், அவரது பாட்டி 'உனக்கு மாலையே போடுவா' என சொல்கிறார். அந்த நேரத்தில் பூசாரி போட்ட பூ சரியாக சுந்தரி மீது வந்து விழுகிறது. அதை அம்மன் போட்டதாக எண்ணி சுந்தரி மகிழ்ச்சி அடைகிறார்.

அதன் பின் பெய்யும் மலையில் குத்தாட்டம் போடுகிறார் அவர். பாட்டி இதை பற்றி எல்லாம் அம்மனிடம் பேசுவதோடு இன்றைய எபிசோடு நிறைவு பெறுகிறது. இனி என்ன நடக்கும் என்பதை நாளை பார்ப்போம்.

அடுத்த செய்தி