ஆப்நகரம்

Kayal Serial : கை வைக்கத் துடிக்கும் டாக்டர்... கனல் கக்கும் கயலின் கண்கள்

கயலை எப்படியாவது அடையவேண்டும் என்று துடிக்கிறான் டாக்டர்..அவளது கண்கள் கனலை கக்குகின்றன.

Samayam Tamil 19 Jan 2022, 6:14 pm
நர்ஸ் ஆக வேலை செய்து குடும்பத்தை காக்க போராடுகிறாள் கயல். அவளை அடையத் துடிக்கிறான் உடன் வேலை செய்யும் டாக்டர். தன்னை தொட நினைத்த கயவனுக்கு சரியான தண்டனை தருகிறாள் கயல்.
Samayam Tamil Kayal Serial
Kayal Serial


தங்கை தேவியின் திருமணத்தை உயிரைக் கொடுத்தாவது நடத்த வேண்டும் என்ற வைராக்கியத்தில் இருக்கிறாள் கயல். நிச்சயத்திற்கு மாப்பிள்ளைக்கு எடுத்த ஆடைகளே அதிக செலவை வைத்து விட்டது. செலவை இழுத்து விட்டு பெரியப்பா சந்தோஷப்படுகிறார்.

குடிகார அண்ணனோ தங்கையின் மாப்பிள்ளையிடம் பணத்தை வாங்கி அதில் சாமி சிலை கடத்தல் வேலையை தொடங்கியிருக்கிறான். தேவியின் காதலன் விக்னேஷிடம் அண்ணன் வாங்கிய பணத்தையும் கயல்தான் திரும்ப கொடுத்திருக்கிறாள்.

வீட்டில் சத்தம் போட்டு அண்ணனை வீட்டை விட்டு வெளியே அனுப்பி விட்டாள். ஆனாலும் அவனோ அடங்காமல் சுற்றுகிறான்.

திருமணத்திற்கு பணம் கேட்டு மருத்துவமனை டீனிடம் பேசுகிறாள் கயல். அவரோ சீஃப் டாக்டரிம் வாங்கிக் கொள்ளச் சொல்கிறார். டாக்டரோ சரியான பெண் பித்தன். கயலை கொத்தி சுவைக்க துடிக்கிறான். அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் எச்சில் துப்புவாள் கயல்.

தன்னிடம் பணம் கேட்டு வந்த கயலை இதுதான் சரியான நேரம் என்று பழிவாங்குகிறான். பல மணி நேரம் காக்க வைத்து புடவையை பரிசளிக்கிறான். அதைக்கட்டிக்கொண்டு என்னுடன் வா உன்னை ராணி மாதிரி பார்த்துக்கொள்கிறேன் நிறைய சம்பாதிக்கலாம் என்றும் தூண்டில் போடுகிறான் டாக்டர்.

அடடா.. குக் வித் கோமாளில இவுங்கலாம் இருக்காங்களா: வெளியான புதிய தகவல்!

கயலுக்கு வந்த ஆத்திரத்தில் கத்தியால் குத்தி கொல்ல வேண்டும் என்று மனதில் வெறி இருந்தாலும் அதை வெளிப்படுத்தாமல் சாமர்த்தியமாக சமாளிக்கிறாள். உடம்பில் காபியை கொட்டி அவனை பாத்ரூமில் பூட்டி கதவை சாத்துகிறாள். தன்னை காக்க வைத்த டாக்டருக்கு சரியான தண்டனையை கொடுத்து விட்டாள் கயல். பணத்தையும் எடுத்துக்கொண்டு வீட்டிற்கு கிளம்புகிறாள்.

வீட்டை விட்டு வெளியேற்றப்பட்ட அண்ணனோ திருட்டுத்தனமாக வீட்டிற்குள் புகுந்து சாமி சிலையை கயல் ரூமிலேயே ஒளித்து வைக்கிறான். சமையல் அறையில் போய் சாப்பிடும் போது கயலிடம் மாட்டிக்கொள்கிறான். தங்கை கல்யாணத்திற்கு உதவி செய்யா விட்டாலும் உபத்திரம் செய்யாதே என்று கோபப்படுகிறாள் கயல்.

தங்கையின் கல்யாணத்தை நடத்த நெருப்பாற்றில் நீந்தும் கயலுக்கு குளிர் நிலவாய் எழில் மட்டுமே உதவி செய்கிறான். அவனது காதலை ஏற்றுக்கொள்வாளா? தங்கையின் கல்யாணம் தடங்கல் இன்றி நடக்குமா? பல கேள்விகளுக்கு விடை தரப்போகிறது கயல் சீரியல்.

அடுத்த செய்தி