Reward போட்டி.. ஜெயித்த வேடர்கள்
இரண்டு அணிகளுக்கும் நடுவில் rewardsகாக போட்டி தொடங்குகிறது. அதில் அவர்கள் குழுவாக சேர்ந்து ஒரு வண்டியை கஷ்டப்பட்டு தள்ளிக்கொண்டு போய் அதில் விறகுகளை கொண்டு வந்து தீப்பற்றி வைக்க வேண்டும். அது எரிந்து மேலே இருக்கும் கயிறு எரிந்து முதலில் துண்டாக வேண்டும். முதலில் முடிக்கும் அணி தான் ஜெயித்ததாக அறிவிக்கப்படும்.
இந்த போட்டியில் வேடர்கள் அணி தான் ஜெயித்தது. அவர்களுக்கு சில பரிசுகளை அர்ஜுன் வழங்கினார். போர்வைகள், தார்பாய், கத்தி உள்ளிட்டவைகள் வழங்கப்ட்டது. மேலும் அவர்களுக்கு தீமூட்டும் கருவியும் வழங்கப்பட்டது. அதனை அவர்கள் பெரிய அளவில் கொண்டாடினர்.
உமாபதி ராமையாவுக்கு தீக்காயம்
தீப்பற்ற வைக்க மொத்த பேரும் போராடிக்கொண்டிருக்க ஒரு கட்டத்தில் அவர்கள் அடிக்கி வைத்திருந்த விறகு அனைத்தும் ஒருகட்டத்தில் கீழே சரிந்துவிடுகிறது. அந்த நேரத்தில் சிலருக்கு தீக்காயமும் ஏற்படுகிறது.
உமாபதி ராமையாவுக்கு இதில் தீக்காயம் ஏற்பட்டது. அவரது கையில் தீக்காயம் ஏற்பட்டு இருக்கிறது. மேலும் அவரது தலைமுடியும் தீய்ந்துவிட்டதாம்.
இருப்பினும் அவரது அணி ஜெயிக்கவில்லையே என அர்ஜுன் கூறினார்.
கொட்டும் மழை..
போட்டியாளர்கள் தனி தீவில் எந்த வசதியும் இல்லாமல் தான் தங்கி இருக்கின்றனர். தங்க இருப்பிடத்தை கூட அவர்கள் இன்னும் சரியாக செய்யவில்லை. இந்நிலையில் திடீர் என மழை பெய்ய தொடங்கியதால் போட்டியாளர்கள் எல்லோரும் அப்படியே அதில் நனைந்துக்கொண்டு தான் இருக்கின்றனர்.
பார்வதி, ஐஸ்வர்யா உள்ளிட்ட சில போட்டியாளர்கள் மழையில் பாட்டு பாடி கொண்டாடி இருக்கின்றனர். அதற்கு பிறகு ஒரு போட்டியும் நடத்தப்பட உள்ளதாக பாட்டிலில் மெசேஜ் வந்து சேர்கிறது.