ஆப்நகரம்

Survivor Tamil: இரண்டாம் நாளே பஞ்சாயத்தை கூட்டிய விஜே பார்வதி

சர்வைவர் தமிழில் இன்று மூன்றாவது எபிசோடு ஒளிபரப்பானது. அதில் விஜே பார்வதி மற்றும் ஸ்ருஷ்டி இருவரும் சண்டை போட்டுகொள்கின்றனர்.

Samayam Tamil 15 Sep 2021, 7:30 am
எந்த வசதியும் இன்றி, வாழவே பல பிரச்சனைகள் இருக்கும் இடத்தில் இருந்தாலும் கூட சர்வைவர் தமிழ் போட்டியாளர்கள் நடுவில் ஆரம்பத்திலேயே பிரச்சனை வெடிக்க தொடங்கி இருக்கிறது.
Samayam Tamil survivor tamil episode 3 review vj parvathy and srushti dange argue on talking at the back
Survivor Tamil: இரண்டாம் நாளே பஞ்சாயத்தை கூட்டிய விஜே பார்வதி


தலைவரை தேர்ந்தெடுக்க போட்டி

காடார்கள் மற்றும் வேடர்கள் - இரண்டு அணிகளுக்கும் தலைவரை தேர்வு செய்யும் போட்டி ஆரம்பிக்கிறது. முதலில் நான்கு பேர் நாமினேட் ஆகி அதன் பின் வாக்கெடுப்பு மூலமாக அதில் இருந்து இரண்டு பேரை தேர்வு செய்கின்றனர். அந்த இருவருக்கும் நடுவில் பாட்டில் உடைக்கும் போட்டி நடத்தப்பட்டு ஜெயிப்பவர் தலைவராக அறிவிக்கப்படுவார்.

காடர்கள் டீமில் இருந்து காயத்ரி மற்றும் லேடி கேஷ் போட்டியிட்டு இறுதியில் காயத்ரி வெற்றி பெறுகிறார். வேடர்கள் டீமில் இருந்து லக்ஷ்மி பிரியா மற்றும் ஐஸ்வர்யா போட்டி போட இறுதியில் லக்ஷ்மி பிரியா ஜெயிக்கிறார்.

தலைவருக்கு சலுகைகள்

தலைவராக ஜெயித்தவர்களுக்கு சில சலுகைகள் வழங்கப்படுவதாக அர்ஜுன் அறிவித்தார். அவர்களுக்கு தனியாக ஒரு குடிசை வழங்கப்படும் என்றும் அதில் சில வசதிகளும் கொடுக்கப்படும் என்றும் கூறுகிறார் அவர்.

அந்த வசதிகளை அவர்கள் வேறு யாருடனும் பகிர்ந்து கொள்ள கூடாது என்றும் கட்டுப்பாடு விதிக்கப்டுகிறது. குழுவினர் என்ன வேலை செய்யவேண்டும். போட்டியில் எப்படி செயல்பட வேண்டும் உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் tribal leader தான் எடுப்பார் எனவும் அர்ஜுன் கூறுகிறார்.

பார்வதி - ஸ்ருஷ்டி சண்டை

அதன் பிறகு போட்டியாளர்கள் அவரவர் தீவுகளுக்கு சென்றுவிடுகின்றனர். அதன் பிறகு வேடர்கள் டீமில் இருக்கும் விஜே பார்வதி மற்றும் ஸ்ருஷ்டி டாங்கே இடையே வாக்குவாதம் நடக்கிறது. ஒரு சின்ன விஷயத்தை ஊதி பெரிதாக்கி இரண்டாம் நாளே பஞ்சாயத்தை கூட்டுகிறார் பார்வதி.

அவர் மணலில் விழுந்ததை பார்த்து ஸ்ருஷ்டி சிரித்தது தனக்கு ஹர்ட் ஆகிவிட்டது என அவர் சொல்கிறார். நீ சிரித்ததால் தான் நான் சிரித்தேன் என ஸ்ருஷ்டி கூறுகிறார். அதே போல ‘மேகரா இருக்குனு நடிக்குறீங்களா’ என தன்னை பற்றி பார்வதி பேசியதாக புகார் சொக்கிறார் ஸ்ருஷ்டி.

இதனால் சர்வைவர் ஷோ மூன்றாம் நாள் எபிசோடு பரபரப்பான கட்டத்தை எட்டி இருக்கிறது.

அடுத்த செய்தி