ஆப்நகரம்

சர்வைவரில் இன்று.. ஜெயித்த பிறகும் வேடர்கள் டீமில் வெடித்த பிரச்சனை

சர்வைவரில் இன்று Immunity சேலஞ்சு நடைபெற்றது. அதில் நந்தாவின் வேடர்கள் டீம் ஜெயித்தது. ஆனால் அதற்கு பிறகும் அவர்கள் டீமில் ஒரு புது பிரச்சனை வெடித்தது.

Samayam Tamil 3 Oct 2021, 3:02 am
காடர்கள் டீமில் இன்று லட்சுமி பிரியா ஐஸ்வர்யாவிடம் சண்டை போடுகிறார். தனக்கு வாய்ப்பு வரவில்லை என சொல்லி அவர் வாக்குவாதம் செய்கிறார்.
Samayam Tamil survivor tamil october 2 episode review kaadargal team win immunity task
சர்வைவரில் இன்று.. ஜெயித்த பிறகும் வேடர்கள் டீமில் வெடித்த பிரச்சனை


புது போட்டியாளர்கள்

காடர்கள் மற்றும் வேடர்கள் இன்று மிகவும் பரபரப்பான ஒரு டாஸ்க் வழங்கப்பட்டது. அதில் ஜெயித்தே ஆக வேண்டும் என்கிற முனைப்பில் இரு அணியினரும் வந்தனர். அவர்களிடம் அர்ஜுன் புதிதாக வர இருக்கும் போட்டியாளர்கள் பற்றி கேட்டார்.

வேடர்கள் டீம் இனிகோவை கேட்க, வனேசா தான் வேண்டும் என காடர்கள் கேட்டனர். அதன் பின் அர்ஜுனும் அவர்களை பிரித்து அனுப்பினார்.

போட்டியில் ஜெயித்த வேடர்கள்

அதன் பின் நடந்த டாஸ்க் மிகவும் கடினமாக இருந்தது. எதிரணியை தடுக்க வேண்டும், அதிக மீறி மர பந்தை உருட்டி சென்று கோல் அடிக்க வேண்டும் என டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இரண்டு அணிகளும் மல்லுக்கட்ட இறுதியில் வேடர்கள் டீம் இரண்டு சுற்றுகளை ஜெயித்து வெற்றி பெற்றது. அதனால் காடர்கள் டீமில் இருந்து நாளை ஒரு பொடியாளாரை எலிமினேட் செய்ய பஞ்சாயத்துக்கு வாங்க ஏன் சொல்லிவிட்டு அர்ஜுன் சென்றுவிட்டார்.

லட்சுமி ப்ரியா - ஐஸ்வர்யா சண்டை

அதன் பின் வேடர்கள் டீமில் சண்டை வெடித்தது. தனக்கு வாய்ப்பு கொடுக்காமல் ஐஸ்வர்யா வேகமாக உள்ளே சென்று விட்டார் என லட்சுமி பிரியா குற்றம் சாட்டுகிறார்.

அது தொடர்பாக வாக்குவாதமும் நடக்கிறது. அப்போ சும்மா இருந்துவிட்டு இப்போ வந்து கேட்கிறாயே என ஐஸ்வர்யா பாயிண்டை பிடித்து கேட்கிறார். ஆனால் லட்சுமி பிரியா தன்னை அவர் கேட்கவே இல்லை என சொல்லி சண்டையை தொடர்கிறார்.

இத்துடன் இன்றைய எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி