ஆபத்தான போட்டி
இன்று இரண்டு அணிகளுக்குமே மிக கடினமான டாஸ்க் கொடுக்கப்பட்டது. இருவர் மாட்டும் தண்ணீர் தொட்டியில் படுத்திருக்க எதிரணியினர் பக்கெட் மூலமாக தண்ணீர் எடுத்து வந்து கொட்ட வேண்டும்.
முதலில் லேடி கேஷ் மற்றும் ஐஸ்வர்யா வெளியேறிவிடுகின்றனர், அதன் பிறகு தான் போட்டி சூடு பிடித்தது. இருக்கும் மற்றொரு தொட்டியை வேகமாக நிரப்பும் அணி தான் வெற்றி பெரும்.
வெற்றி பெற்ற காடர்கள்
பார்வதி இருக்கும் தொட்டியை காடர்கள் வேகமாக நிரப்பிவிட்டனர். அதனால் பார்வதி மூச்சி விட முடியாமல் வெளியே வந்துவிடுகிறார். அதனால் காடர்கள் அணி ஜெயிக்கிறது. சர்வைவர் தொடங்கியதில் இருந்து அவர்கள் வெல்வது இது தான் முதல் முறை.
அதை அவர்கள் கொண்டாடினார்கள். இந்த வெற்றி அவர்களுக்கு அதிகம் ஊக்கத்தையும் கொடுத்திருக்கிறது.
பார்வதிக்கு ஆப்பு
வேடர்கள் அணி தோற்றதால் அவர்கள் நாளை எபிசோடில் பஞ்சாயத்துக்கு வர வேண்டும். அதில் வாக்கெடுப்பின் அடிப்படையில் ஒரு போட்டியாளர் எலிமினேட் செய்யப்படுவார்.
அந்த டீமில் இருப்பவர்கள் பெரும்பாலானவர்கள் பார்வதியை தான் டார்கெட் செய்கின்றனர். அதனால் அவர் தான் வெளியே போவார் என எதிர்பார்க்கப்படுகிறது.