ஆப்நகரம்

யாருக்கெல்லாம் யோகம்.. குருபெயர்ச்சி பலன்கள் 2024.. லிஸ்ட்டில் நம்பர் 1 இந்த ராசி தான் - தமிழா தமிழாவில் இந்த வாரம் இது தான் ஸ்பெஷல்.!!

சின்னத்த்திரையில் பிரபலமான நிகழ்ச்சியாக ஒவ்வொரு வாரமும் ஒளிப்பரப்பாகி வருகிறது 'தமிழா தமிழா'. இந்நிகழ்ச்சியின் இந்த வாரத்திற்கான ப்ரோமோ வீடியோ வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

Authored byஆஷிக் முகமது | Samayam Tamil 25 Apr 2024, 2:59 pm
தமிழ் சின்னத்திரையில் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒவ்வொரு வாரமும் ஞாயிறு மதியம் 12.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் பிரபலமான விவாத நிகழ்ச்சி தமிழா தமிழா. இந்த நிகழ்ச்சியை ஆவுடையப்பன் தொகுத்து வழங்கி வருகிறார்.
Samayam Tamil தமிழா தமிழா
தமிழா தமிழா


ட்ரெண்ட்டுக்கு ஏற்ற வகையில் தலைப்புகளை தேர்வு செய்து விவாதங்களையே நடத்தி வருகிறது நிகழ்ச்சி குழு. கடந்த வாரம் கணவனே கண் கண்ட தெய்வம் Vs மனைவி சொல்லே மந்திரம் என்று இருக்கும் கணவர்கள் என்ற பெயரில் விவாதம் நடைபெற்றது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

இதனை தொடர்ந்து இந்த வாரம் குருபெயர்ச்சி பலன்களை வைத்து நிகழ்ச்சி நடைபெற இருப்பதாக தெரிய வந்துள்ளது. மே 1-ம் தேதி குரு பெயர்ச்சி நடைபெற உள்ளது. இதனால் 12 ராசிக்காரர்களுக்கு பலன்கள் எப்படி இருக்கும்? யாருக்கெல்லாம் யோகம் கிடைக்கும், பல வரவு எப்படி இருக்கும் என பல கேள்விகள் மக்களின் மனதுக்குள் ஓடி கொண்டிருக்கிறது.

ஸ்ரீகாந்த் தேவா, சுஜிதா, திவ்யா துரைசாமி.. குக் வித் கோமாளி சீசன் 5ல் இத்தனை பிரபலங்களா.?: முழு லிஸ்ட் இதோ.!

இதற்கெல்லாம் பதில் கிடைக்கும் வகையில் 12 ராசிக்கான ஜீ தமிழ் பிரபலங்கள் ஒரு பக்கமும் குரு பெயர்ச்சி பலன்களை சொல்லும் ஜோதிடர்கள் ஒருப்பக்கமும் அமர்ந்து குருபெயர்ச்சி பலன்களை கூற உள்ளனர். 12 ராசிக்காரர்களில் யாருக்கு அதிக யோகம் என்று மதிப்பெண் போட்டு கூற உள்ளனர்.

பாக்யாவுடனான கல்யாணம் பற்றி பேசிய செல்வி.. அதிர்ந்து போன பழனிச்சாமி: எங்க போய் முடிய போகுதோ.!

ஜோதிடர்கள் கொடுத்த மதிப்பெண் அடிப்படையில் கன்னி ராசி 100-க்கு 100 மதிப்பெண்களை பெற்று முதலிடம் பிடித்துள்ளது, 96 மதிப்பெண்களுடன் விருச்சிகம் 2-ம் இடத்தை பிடித்துள்ளது. இப்படி குருபெயர்ச்சி பலன்கள் குறித்து மேலும் பல தகவல்களை அறிந்து கொள்ள தமிழா தமிழா நிகழ்ச்சியை உங்கள் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் காண தவறாதீர்கள்.
எழுத்தாளர் பற்றி
ஆஷிக் முகமது
நான் ஆசிக் முகமது. ஊடகத்துறையில் கடந்த நான்கு வருடமாக பணியாற்றி வருகிறேன். எழுத்தின் மீதிருந்த ஆர்வத்தால் இந்த துறையை தேர்ந்தெடுத்தேன். அரசியல், கவிதை, சினிமாவில் ஆர்வம் கொண்ட நான், தற்போது டைம்ஸ் ஆப் இந்தியாவின் சமயம் தமிழ் இணைய ஊடகத்தில் சினிமா சம்பந்தமான கட்டுரைகள் எழுதி வருகிறேன்.... மேலும் படிக்க

அடுத்த செய்தி