ஆப்நகரம்

கணவனுக்கு மனைவியாக இருக்கவே ஆசை! தொடரிலிருந்து விலகிய வினோதினி விளக்கம்!

கணவனின் உடல்நலக்குறைவு காரணமாக ஆக்னி நட்சத்திரம் தொடரிலிருந்து விலகிய நடிகை வினோதினி!

Samayam Tamil 19 Jul 2019, 4:32 pm
வெள்ளித் திரை நாயகிகளாக இருந்து தற்போது சின்னத்திறை நாயகிகளாக ஜொலிக்கும் மெளனிகா , வினோதினி இருவருமே பாலு மகேந்திராவின் வளர்ப்புகள். 'வண்ண வண்ணப் பூக்கள்' படத்திற்குப் பிறகு இத்தனை வருடங்கள் கழித்து இருவரும் ஒரு தொடர்இணைந்து நடித்திருக்கிறார்கள் என்பதும், இருவருமே சொந்தக் குரலில் பேசி நடித்து வருகின்றர்.
Samayam Tamil vinodhini


சன் தொலைக்காட்சியில் கடந்த மே மாதம் முதல் ஒளிபரப்பாகி வரும் தொடர், 'அக்னி நட்சத்திரம்'. இந்த தொடர் ஆரம்பித்து இரண்டு மாதங்கள் மட்டுமே கடந்த நிலையில், அந்த தொடரிலிருந்து விலகியிருக்கிறார், வினோதினி.

இந்த அதிரடி முடிவு குறித்து விளக்கம் அளித்துள்ள அவர், ''அண்மையில் தான் தன் கணவருக்கு அறுவை சிகிச்சை முடிந்து கொஞ்சம் கொஞ்சமாகத் தேறி வருவதாக கூறியுள்ளார். அவருக்கு, மருத்துவ பணிவிடைகள் செய்ய வேண்டி இருப்பதாகவும், அதுவரை தொடரிலிருந்து விலகிக்கொள்கிறேன்' என விளக்கம் அளித்துள்ளார்.

தன் கணவர் உடல்நிலை தேறிவிட்ட பிறகு, மீண்டும் அந்த சீரியலில் இணைவேன் என்றும், நடிகை வினோதினி தெரிவித்துள்ளார். இத்தனை வருடங்கள் சினிமா, தொடர்களில் தலைகாட்டாமல் இருந்த எனக்கு மீண்டும் சீரியலில் நடிக்க வாய்ப்பு வந்தது. எனக்கு அது சந்தோஷமே. இருந்தும், என் கணவரின் உடல்நிலை இப்படி இருக்கும்போது நிச்சயம் என்னால் இப்போதைக்கு தொடர்ந்து நடிக்க முடியாது.'' என்றார், வினோதினி.

சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'அக்னி நட்சத்திரம்' சீரியலில் மெளனிகா ஜெயந்தியாகவும், வினோதினி நளினியாகவும் நடித்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி