ஆப்நகரம்

ஏடிஎம் பயனர்களை ஏமாற்றிய டிவி நடிகர் கைது

ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட டிவி நடிகர் கைது செய்யப்பட்டார்.

Samayam Tamil 3 Apr 2021, 5:17 am
ஏடிஎம்-மில் பணம் எடுக்க வரும் நபர்களை குறிவைத்து ஏமாற்றிய ஐந்து பேர் கொண்ட கும்பலை மஹாராஷ்ரா போலீசார் கைது செய்து இருக்கின்றனர். அதில் ஒருவர் டிவி நடிகர் அஜய் ஷுக்லா என்பது குறிப்பிடத்தக்கது. அவர் இதற்குமுன் சில பிரபல சீரியல்கள் மற்றும் crime தொடங்களில் நடித்து இருக்கிறார்.
Samayam Tamil TV actor Arrested


ஏடிஎம்-களில் உதவி செய்வது போல வந்து ஏமாற்றும் மோசடி தொடர்ந்து அதிகரித்து வருவதாக புகார் வந்த நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து தீவிரமாக விசாரணையில் இறங்கினர். புகார் வந்த ஏடிஎம்-களில் உள்ள சிசிடிவி மற்றும் அருகில் இருந்த சிசிடிவி ஆகியவற்றை ஆய்வு செய்த போது, அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரி வண்டிகளை மற்றும் ஆட்டோ ரிக்க்ஷ இருப்பது தெரியவந்தது.

அதன் மூலமாக இந்த ஏமாற்றுவேலையில் ஈடுபட்டது டிவி நடிகர் அஜய் ஷுக்லா மற்றும் அவரது கேங் தான் என கண்டுபிடித்தனர்.

அவர்களை கைது செய்திருக்கும் போலீசார், அவரிகளிடம் இருந்து 60 ஏடிஎம் கார்டுகள், செல்போனால் உள்ளிட்டவற்றை பறிமுதல் செய்து உள்ளனர். அவர்கள் பயன்படுத்திய பைக், ஆட்டோ ரிக்ஷா போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது.

அடுத்த செய்தி