ஆப்நகரம்

Vanathai Pola: அண்ணனை காப்பாற்ற ஒரே வழி.. வெற்றியை பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் துளசி

வானத்தை போல சீரியலில் இன்று வெற்றியை பார்க்க வருகிறார் துளசி. அண்ணனை போலீஸ் விடுவது வெற்றியின் வாக்குமூலத்தில் தான் இருக்கிறது என அவர் சொல்கிறார்.

Samayam Tamil 17 May 2021, 10:07 pm
லாக்கப்பில் இருக்கும் சின்ராசை சந்திக்க செல்கிறார் தாசில்தார் சந்தியா. அவர் இன்ஸ்பெக்டரை சந்தித்து பேசும்போது வங்கி அதிகாரியை அவர் அடித்ததால் பெரிய இடத்தில் இருந்து புகார் வந்திருக்கிறது என்றும், அதனால் தான் சின்ராசை கைது செய்திருக்கிறோம் என்றும் கூறுகிறார். வெற்றி கண்விழித்த பிறகு அவர் வாக்குமூலத்தை பொறுத்து தான் FIR பதிவு செய்ய வேண்டும் என்றும் அவர் சொல்கிறார்.
Samayam Tamil vanathai pola serial today may 17 episode thulasi visits hospital to talk to vetri
Vanathai Pola: அண்ணனை காப்பாற்ற ஒரே வழி.. வெற்றியை பார்க்க மருத்துவமனைக்கு செல்லும் துளசி


நீங்கள் செய்வதை செய்யுங்கள், நாங்கள் சட்டப்படி பார்த்துக்கொள்கிறோம் என சொல்லும் அவர், 'நான் பார்த்துகொள்கிறேன்' என சின்ராசிடம் சொல்லிவிட்டு வருகிறார்.

போலிஸ் ஸ்டேஷனில் தகராறு செய்யும் ராஜபாண்டி

தாசில்தார் வெளியில் வந்தபிறகு அவரிடம் என்ன நடந்தது என விசாரிக்கிறார் ராஜபாண்டி. கேஸ் ஸ்ட்ராங் ஆக இருப்பதால் சின்ராசை எளிதில் விட்டுவிட மாட்டார்கள் என கூறுகிறார்.

என்ன செய்ய வேண்டும் என எங்களுக்கு தெரியும் என கூறுகிறார் ராஜபாண்டி. நீங்க சட்டப்படி பாருங்க, நாங்க அதிரடியாக என்ன செய்ய வேண்டும் என யோசிக்கிறோம் என சொல்லிவிட்டு கிளம்புகிறார்.

வெற்றி குடும்பத்தை மிரட்டும் ராஜபாண்டி

போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ராஜபாண்டியும் அவரது அப்பாவும் நேராக வெற்றி அனுமதிக்கப்பட்டு இருக்கும் மருத்துவமனைக்கு செல்கின்றனர். அங்கு அவரது சித்தி மற்றும் குடும்பத்தினரும் இருக்கின்றனர்.

அவர்களை மிரட்டும் ராஜபாண்டி, 'என் மச்சானுக்கு எதிரா வாக்குமூலம் சொன்னால் உங்க வெற்றி உயிரோட இருக்க மாட்டான்' என சொல்கிறார். அந்த நேரம் பார்த்து போலீசும் வெற்றியிடம் வாக்குமூலம் வாங்க வருகிறது.

ராஜபாண்டி தங்களை மிரட்டுவதாக வெற்றியின் சித்தி போலீசில் புகார் சொல்கிறார். அதனால் அவர்கள் இருவரையும் வெளியில் கூட்டி சென்று எச்சரிக்கிறார் போலீஸ். அதனால் அவர்கள் அமைதியாக கிளம்புகின்றனர்.

வெற்றியை பார்க்க வரும் துளசி

வீட்டுக்கு செல்லும் துளசியின் மாமா போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை சொல்கிறார். வெற்றி கண்விழித்து சின்ராசு பற்றி நல்ல முறையில் வாக்குமூலம் அளித்தால் தான் சின்ராசு தப்பிக்க முடியும் என சொல்கிறார்.

இதனால் உடனே துளசி மருத்துவமனைக்கு வெற்றியை பார்க்க கிளம்புகிறார். அங்கு அவர் போகும்போது சரியாக ராஜபாண்டி வருவதை பார்த்து ஒளிந்துகொள்கிறார். அதன் பின் வெற்றி இருக்கும் அறையின் ஜன்னலை திறந்து பார்க்கிறார் துளசி. (Pic Credits: Sunnxt)

நீ லவ் பண்றியா இல்லையா?

அப்போது வெற்றியின் உறவினர் வெளியில் வந்து துளசியிடம் பேசுகிறார். வெற்றி உன்னை பற்றி என்னிடம் பல முறை பேசி இருக்கிறான். ஏன் இப்படி அடித்தீர்கள் என கேட்கிறார். அதற்கு நடந்த அனைத்தையும் சொல்கிறார் துளசி. தற்போது அண்ணனை காப்பாற்றுவது வெற்றி அளிக்கவுள்ள ஸ்டேட்மென்ட்டில் தான் இருக்கிறது என துளசி சொல்கிறார். வெற்றி அப்படி சொல்லமாட்டான், உன் அண்ணனை நிச்சயம் காட்டி கொடுக்கமாட்டேன் என உறுதியாக செல்கிறார் அவர்.

'நீ வெற்றியை லவ் பண்றியா இல்லையா? ஒளிவு மறைவு இல்லாமல் சொல்லு' எனவும் கேட்கிறார். இத்துடன் எபிசோடு நிறைவு பெற்றது.

அடுத்த செய்தி